பறக்கும் துப்பாக்கி - அசத்தும் இந்தியா!
Jan 14, 2026, 12:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

Murugesan M by Murugesan M
Jun 30, 2025, 07:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய பாதுகாப்புத்துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட ட்ரோனுடன் பறக்கும் துப்பாக்கி வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்கச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்தத் துப்பாக்கிகள் எதிரிகளுக்குச் சிம்ம சொப்பணமாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரைத் தலைமையிடமாக கொண்டு இயங்கும் பாரச் சப்ளை அண்ட் சர்வீசஸ் நிறுவனம் பாதுகாப்புத்துறையுடன் இணைந்து பல்வேறு ராணுவ தளவாடங்களைத் தயாரித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, செயற்கை நுண்ணறிவின் மூலம் இயங்கும் ஏகே 203 வகைத் துப்பாக்கி பொருத்தப்பட்ட ட்ரோனை வடிவமைத்துச் சாதனை படைத்துள்ளது. அதிநவீனத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ட்ரோன் துப்பாக்கி இந்திய ராணுவத்தின் மூலம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

வேகம், துல்லியம் மற்றும் தாக்குதல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ட்ரோன் துப்பாக்கி பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலேயே இந்தத் துப்பாக்கி தயாரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 14 ஆயிரம் அடி உயர்த்தில் செயற்கை நுண்ணறிவுத் திறனோடு தானாக இயங்கும் ட்ரோன்கள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அதன் அடுத்தகட்டமாகத் துப்பாக்கியுடன் இயங்கும் ட்ரோன்கள் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

மிகவும் சவாலான பகுதிகளில் ராணுவ வீரர்களை நிலைநிறுத்துவது கடினம் என்பதால் இதுபோன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி பாதுகாப்பு பணியை மேம்படுத்த முடியும் எனவும் கூறப்படுகிறது. இந்த ட்ரோன் துப்பாக்கியின் சோதனை முயற்சி வெற்றியடைந்திருப்பது இந்தியாவின் பாதுகாப்பு உட்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதோடு, பாதுகாப்புத்துறையின் திறனையும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.

ட்ரோனில் பொருத்தப்பட்டிருக்கும் துப்பாக்கி 8 கிலோ கிராம் எடைக் கொண்டதாகும். நிமிடத்திற்கு 850 முதல் 1050 சுற்றுகள் வரைச் சுடும் திறனைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்படும் ட்ரோன் துப்பாக்கி காற்று, வெப்பநிலை மற்றும் தூரத்தின் அடிப்படையில் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் வசதி படைத்ததாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள் வரைத் தானாக இயங்கும் தொழில்நுட்ப வசதிகளோடு, வாகனங்கள், கடற்படைக் கப்பல்களில் இருந்தபடியே இதனைச் செயல்படுத்திடவும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம் படிப்படியாகத் தானியங்கி மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாகப் பாதுகாப்புத்துறையில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான திட்டங்களுக்கு ஆண்டுதோறும் நூறு கோடி ரூபாயையும் மத்திய அரசு ஒதுக்கி வருகிறது.

இந்தியப் பாதுகாப்பு படைகளை முழுவதும் நவீனமயமாக்கும் முயற்சிக்குத் தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த ட்ரோன் துப்பாகி பெரும் உந்து சக்தியாக அமைந்திருக்கிறது.

Tags: Flying Gun - Amazing Indiaபறக்கும் துப்பாக்கிஅசத்தும் இந்தியாட்ரோனுடன் பறக்கும் துப்பாக்கிஏகே 203 வகை துப்பாக்கி
ShareTweetSendShare
Previous Post

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

Next Post

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் – எல்.முருகன் திட்டவட்டம்!

Related News

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies