கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களைக் காண அனுமதி வழங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
கொடைக்கானலில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்ததால், குணா குகை, தூண் பாறை உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களுக்குப் பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து யானைகள் வனப்பகுதிக்குள் சென்றதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் செல்ஃபி எடுத்து உற்சாகமடைந்தனர்.