கொட்டும் மழைக்கும் மத்தியில் ஒடிசா புரி ரத உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடைகளைப் பிடித்தவாறு கலந்து கொண்டனர்.
ஒடிசாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் உற்சவம் நேற்று தொடங்கியது. ஜெகந்நாதர் உள்பட மூன்று ரதங்களும் பிரதான கோயிலில் இருந்து புறப்பட்டு 3 கிலோ மீட்டர்த் தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோயில் வரை இழுக்கப்படும்.
9 நாள்களுக்குப் பின்னர் ரதங்கள் மீண்டும் கோயிலுக்கு இழுத்து வரப்படும். இரண்டாவது நாள் ரத உற்சவத்தின் போது மழைப் பெய்த நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடைகளைப் பிடித்தவாறு பங்கேற்றனர்.