நெல்லையில் உள்ள நட்ஸ் அண்ட் சாக்கோஸ் பேக்கரியில் வாங்கப்பட்ட உணவுப் பொருட்களில் புழுக்கள் நெளிந்ததால் கடைக்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பாளையங்கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள இந்த “நட்ஸ் அண்ட் சாக்கோஸ்” கிளையில், வாடிக்கையாளர் ஒருவர், பாதாம், முந்திரி, வால்நட் மற்றும் கிஸ்மிஸ் பழங்கள் உட்பட 2 ஆயிரத்து 198 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வாங்கியுள்ளார்.
வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, வாங்கிய ஐந்து கிலோ முந்திரிப் பருப்பில் புழுக்கள் நெளிந்ததைக் கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார்.
ஆய்வுக்குப் பிறகு உணவுப் பொருட்களின் தரத்தில் குறைபாடு கண்டறியப்பட்டதால், சம்பந்தப்பட் பேக்கிரிக்குச் சீல் வைக்கப்பட்டது.