தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே, ஆசிரியர்ப் பற்றாக்குறை நிலவுவதால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகக் கூறி பள்ளியை மாணவர்களின் பெற்றோர் முற்றுகையிட்டனர்.
மார்க்கையன்கோட்டைப் பேரூராட்சியில் செயல்படும், அரசு தொடக்கப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் சில தினங்களுக்கு முன் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, பள்ளியை முற்றுகையிட்டுப் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.