விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டி அருகே உள்ள பிளவக்கல் அணைப் பூங்காவின் சீரமைப்பு பணிகளை விரைவில் தொடங்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவராத்தில் கூமாப்பட்டி கிராமம் அமைந்துள்ளது.
இந்தக் கிராமத்தை சேர்ந்த இளைஞர்ச் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவால் அந்த ஊர் வைரலானது. அந்த ஊரின் அருகே சாஸ்தா கோயில் அணை, பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு நீர்த்தேக்கம் மற்றும் 13 நீர்வீழ்ச்சிகள் உள்ளன.
இதில் பிளவக்கல் அணைப் பூங்காவை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டுமென மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் விருதுநகர் மாவட்டத்திற்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின், பிளவக்கல் அணைப் பூங்கா 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் என அறிவித்தார்.
ஆனால் அறிவிப்பு வெளியிட்டுப் பல மாதங்கள் ஆகியும் பணிகளைத் தொடங்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், பூங்காவை விரைவில் சீரமைத்துச் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.