சீனாவில் வானில் பறந்து கொண்டிருந்த உள்நாட்டு விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு மற்றும் துர்நாற்றம் வீசியதால், அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
சீனாவின், ஷாண்டாங் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான உள்நாட்டு விமானம் ஒன்று, கிங்டாவோவிலிருந்து ஷாங்காய் நகருக்குப் பயணம் செய்து கொண்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், அந்த விமானம் நாங்சிங் நகரில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரெனத் துர்நாற்றம் வீசியதுடன், விமானத்தில் அதிகச் சத்தம்கேட்டதாக பயணிகள் தெரிவித்தனர்.