மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விதிமுறைகளில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி அரசு துறைகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று தற்போது ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களைச் சேர்ந்த ஓய்வூதியதாரர் அல்லாத பெண்களும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
அரசு துறைகளில் மானியம் பெற்று அதன் மூலம் 4 சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள் என கூறப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியம் பெறாத பெண்களும் விண்ணப்பிக்கலாம்.
இதே போல கணவரால் கைவிடப்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேலாகியும் திருமணமாகாத பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள பெண்களும் விண்ணப்பிக்கலாம் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.