அண்ணா பல்கலைக் கழக மாணவியை, புகைப்படங்களை காட்டி அச்சுறுத்திய புகாரில் முன்னாள் காதலனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், அதே கல்லூரியில் பயின்ற ராம்குமார் என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது. பின்னர், ராம்குமாரின் மீது சந்தேகம் அடைந்த மாணவி, அவருடனான உறவை துண்டித்ததால், புகைப்படங்களை காட்டி மீண்டும் காதலிக்குமாறு மாணவியை வற்புறுத்தியதாக தெரிகிறது.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இதனடிப்படையில், பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார், பொறியியல் பட்டதாரியான ராம்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.