ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் வழக்கம் போல் கடலுக்கு சென்றனர்.
மன்னார் கடற்பரப்பில் மீன் பிடித்துவிட்டு ராமேஸ்வரம் துறைமுகம் நோக்கி மீனவர்கள் கரை திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு படகை வழிமறித்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 8 மீனவர்களை கைது செய்தது. தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட மீனவர்களிடம், இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.