இந்து கோயில்களின் பாரம்பரிய நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிடுவதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டியுள்ளார்.
கோயில் விழாக்களில் முதல் மரியாதை போன்ற நடைமுறைகளை நிறுத்த வேண்டும் என சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், முதல் மரியாதை என்பது சாதி பாகுபாடு இன்றி வழங்கப்படுவது எனவும் இது ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும் செயல் அல்ல எனவும் கூறியுள்ளார்.
முன்னோர்கள் வகுத்து வைத்த கோயில் நடைமுறையில் நீதிமன்றம் தலையிடுவது இந்துக்களின் மனதை புண்படுத்தும் செயல் எனக் குற்றம்சாட்டியுள்ள அவர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல கோயில்களில் திட்டமிட்டு சிக்கல்கள் உருவாக்கப்படுவதாக தெரிவித்தார்.
கோயில் திருவிழாக்களில் சாதி அடையாளம் கூடாது என கூறிய நீதிமன்றம், அரசியல் அடையாளங்கள், அரசியல்வாதிகளின் தலையீடு போன்றவரை இருக்கக்கூடாது என கூறாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபோன்ற தடைகளால் உபயதாரர் இல்லை என கோயில் திருவிழாக்களை அறநிலையத்துறை நிறுத்தகூடும் என்ற அபாயத்தை சுட்டிக்காட்டியுள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம், இந்துக்களின் மனநிலையை அறிந்து உத்தரவை நீதிமன்ற திரும்பப்பெற வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.