சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் பலியான சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சிவகங்கையில் போலீசார் தாக்கியதால் காவலாளி அஜித்குமார் உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி,
ஜெய்பீம் படம் பார்த்தேன், உள்ளம் உலுக்கியது என சினிமாவுக்கு Review எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின் எங்கே இருக்கிறார்? எனவும் கேள்வி எழுப்பினார்
மேலும் அந்த பதிவில் ஒருவர் தவறு செய்ததாக கருதினால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டுமே தவிர சட்டத்தை காவல்துறை கையில் எடுக்கக்கூடாது எனவும் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை கூட நிர்வகிக்கத் தெரியாத பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் இபிஎஸ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்
உயிரிழந்த காவலாளி அஜித்குமாரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமி, இளைஞரின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.