சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் இயந்திர கோளாறு காரணமாக அவசரமாகச் சென்னையில் தரையிறங்கியது.
சென்னையில் இருந்து 159 பயணிகள் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 165 பேருடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஹைதராபாத் நோக்கிச் சென்று கொண்டு இருந்தது.
ஆந்திர மாநிலம் நெல்லூரைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதையறிந்த விமானி, அவசரமாகச் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டார்.
அப்போது சென்னை விமான நிலையத்தில், அவசரமாகத் தரையிறக்கும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் விமான பயணிகள் உட்பட 165 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.