சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி ஒருவர் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மோட்டூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் வளர்ப்பு நாயை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் விஷம் வைத்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பான விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்ட நபர் காவல்நிலையம் வரவில்லை எனத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த முருகன், காவல்நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்றார். உடனடியாக தடுத்து நிறுத்திய போலீசார், அவரது மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.