கல்லணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் டெல்டா பாசனத்திற்காகக் கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதன் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. மேட்டூர் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூரில் உள்ள கல்லணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கல்லணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காகக் கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளது.
வெண்ணாற்றில் 9 ஆயிரத்து 306 கன அடியும், கல்லணை கால்வாயில் 3 ஆயிரத்து 514 கன அடியும், கொள்ளிடத்தில் 2 ஆயிரத்து 255 கன அடியும் நீர் திறக்கப்பட்டுள்ளது.