சர்வதேச அணுசக்தி முகமை தலைவர் க்ரோஸியை கைது செய்து தூக்கிலிட வேண்டும் என ஈரான் கூறியதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரான் குறித்த தகவல்களை இஸ்ரேலுக்குக் கசியவிட்டதாகக் கூறி க்ரோஸியை ஈரானுக்குள் நுழையத் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஈரானின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அணுசக்தி முகமை பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.