திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வாணியம்பாடி வழியாகப் போதைப் பொருட்கள் கடத்திச் செல்வதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நெக்குந்தி சுங்கச் சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெங்களூரில் இருந்து வேலூர் நோக்கிச் சென்ற மினி பிக்கப் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த ரேக்கில் ஹான்ஸ்,குட்கா பொருட்களைப் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அதில் இருந்த 2 பேரையும் கைது செய்த போலீசார், 630 கிலோ குட்கா பொருட்களை வேனுடன் பறிமுதல் செய்து அம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.