கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி சுமார் 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்த நபர் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கெலமங்கலம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் ஏழு லட்சம் ரூபாய் மற்றும் 10 லட்சம் ரூபாய் ஏல சீட்டு நடத்தி வந்த நிலையில், பூனப்பள்ளி கிராமத்து மக்கள் அவரிடம் சீட்டுக் கட்டி வந்துள்ளனர்.
திடீரென அவர் தலைமறைவானதால், பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
தற்போது வரை கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.