இந்தியாவுடன் நட்பு பாராட்டும் இஸ்ரேல் - ஈரான்!
Nov 16, 2025, 05:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவுடன் நட்பு பாராட்டும் இஸ்ரேல் – ஈரான்!

Web Desk by Web Desk
Jun 30, 2025, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்மையில் நடைபெற்ற ஈரான் – இஸ்ரேல் மோதலின்போது அந்நாடுகளில் உள்ள இந்திய முதலீடுகளுக்கும், அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கான காரணம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

மத்திய கிழக்கில் பெரும் சூறாவளியைக் கிளப்பி ஓய்ந்துள்ளது, இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர். வெறும் 12 நாட்கள் மட்டுமே நடைபெற்ற இந்த மோதலில், அதிநவீன ட்ரோன்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகள், கிளஸ்டர் வெடிகுண்டுகள் எனக் கைவசமுள்ள அனைத்து ஆயுதங்களையும் இருநாடுகளும் களமிறக்கின.

மக்கள் வசிக்கும் பகுதிகள், மருத்துவமனைகளும் பள்ளிகளும் உள்ள இடங்கள் எனப் பாரபட்சம் இல்லாமல் அனைத்து இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டன. ஆனால், இந்தியா முதலீடு செய்துள்ள இடங்களில் மட்டும் தப்பி தவறிக்கூட இஸ்ரேலும் ஈரானும் தாக்குதல் நடத்தவில்லை. அங்கு வசிக்கும் இந்தியர்கள் மீது சிறு கீறலும் விழவில்லை.

இதற்கு முக்கிய காரணம், இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையும்,  பிரதமர்  நரேந்திர மோடியும்தான். ஈரானில் உள்ள சாபஹார் பகுதியில் உள்ள துறைமுகத்தை இந்தியா 10 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுடனும், ஐரோப்பியத் தேசங்களுடனும், ரஷ்யாவுடனும் இந்தியா எளிதில் வணிகம் மேற்கொள்ள இந்த துறைமுகம் பாலமாக இருந்து வருகிறது. மேலும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கும் இந்த துறைமுகம்  துருப்புச்சீட்டாக உள்ளது.

ஈரானின் முக்கிய இடங்களைக் குறிவைத்து சாரை சாரையாக ஏவுகணைகளை அனுப்பிய இஸ்ரேல், சாபஹார்  துறைமுகம் பக்கம் தலைவைத்தே படுக்கவில்லை. இத்தனை ஏன், அந்த துறைமுகம் அருகில் உள்ள இடங்களில் கூட இஸ்ரேல் தாக்குதல் நடத்தத்  தயங்கியது. இத்தனைக்கும் ஈரானில் உள்ள மிகப்பெரிய துறைமுகமே சாபஹார் துறைமுகம்தான். அதனைத் தாக்கினால் ஈரானுக்கு மிகப்பெரிய சேதத்தை இஸ்ரேலால் ஏற்படுத்தியிருக்க முடியும்.

ஆனால், இந்தியாவை பகைத்துக்கொள்ளக் கூடாது என்பதில் இஸ்ரேல் மிகக் கவனமாக இருந்தது. இந்தியாவுடனும், பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் கொண்டுள்ள நெருங்கிய பந்தத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டு இது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆரம்பம் முதலே பிரதமர் மோடியுடன் நல்ல நட்புறவைப் பாராட்டி வருகிறார்.

ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியவுடனே உலக நாட்டு தலைவர்கள் சிலரை தொடர்புகொண்டு நெதன்யாகு பேச முடிவெடுத்தார்.  அவ்வாறு அவர் முதலில் பேசிய தலைவரில் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடி. தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது? மத்திய கிழக்கில் நிலவும் சூழல் என்ன? என்பது குறித்தெல்லாம் மோடியிடம் நெதன்யாகு எடுத்துரைத்தார்.

மறுபுறம், இந்தியாவுடன் நட்புறவு பேணுவதில், இஸ்ரேலுக்குச் சற்றும் சளைத்த நாடல்ல ஈரான். இஸ்ரேலில் இந்தியா முதலீடு செய்துள்ள இடங்களில் ஈரானும் எந்த தாக்குதலும் நடத்தவில்லை. தங்கள் நாட்டில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறத் தேவையான உதவிகளையும் ஈரான் செய்து கொடுத்தது.

போர் சூழல் காரணமாக ஈரானின் வான் போக்குவரத்து பரப்பு மூடப்பட்டிருந்தது. அதனைத் திறந்தால் மட்டுமே இந்தியர்களைத் தாயகம் அழைத்து வர முடியும் என்ற நிலை. இது தொடர்பாக ஈரானிடம் கோரிக்கை விடுத்தது இந்தியா. ஈரான் சற்றும் யோசிக்கவில்லை. இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறத் தனது வான் பரப்பைத் திறந்துவிட்டு உதவிக்கரம் நீட்டியது.

மேலும், இஸ்ரேலை போலவே ஈரானும் இந்தியாவைத் தொடர்புகொண்டு, போர் சூழல் குறித்து விளக்கியது. போர் முடிந்தவுடன், தங்களுக்குத் துணை நின்றதற்காக இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் ஈரான் நன்றி தெரிவித்தது. இஸ்ரேல், ஈரான் என்றல்ல உலகில் உள்ள அனைத்து நாடுகளுமே இந்தியாவுடன் நட்புறவு பாராட்டவே விரும்புகின்றன. இதில் பாகிஸ்தானும் சீனாவும் மட்டும் விதிவிலக்கு.

அனைத்து நாடுகளையும் அரவணைத்துச் செல்லும் வகையில்தான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால்தான் இந்தியாவுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒட்டுமொத்த நாடுகளும் இந்தியாவுக்குத் துணை நிற்கின்றன. தங்களே ஒரு பிரச்சனையில் உள்ள போதிலும்கூட இந்தியாவிற்கு உதவ முன்வருகின்றன.

Tags: Israel and Iran express friendship with IndiaIndiaIranairstrikes on Israel.Israeli attack.
ShareTweetSendShare
Previous Post

பறிபோகும் பொதுச்செயலாளர் பதவி : ஓரங்கட்டப்படும் துரைமுருகன்!

Next Post

பிரம்மோஸ் Vs K6 ஏவுகணை : இந்தியாவின் போர் வாளும்… பாதுகாப்புக் கவசமும்…!

Related News

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

திருப்பதி தேவஸ்தான முன்னாள் விஜிலன்ஸ் அதிகாரி கொலை வழக்கு – போலீசார் தீவிர விசாரணை!

சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா அம்மா மறைவு – அண்ணாமலை இரங்கல்!

கேரளாவில் பரவும் அமீபா தொற்று – சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூரில் SIR நடவடிக்கை – திமுகவினர் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு!

சிவகங்கையில் வட்டாட்சியரை கடித்த தெருநாய் – நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்!

சென்னை சேலையூரில் கொள்ளையர்கள் கைவரிசை – வெளியானது வீடியோ!

சுசீந்திரம் தாணுமாலய கோயில் தெப்பக்குள விவகாரம் – அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

வேலூரில் திமுக கவுன்சிலர் இல்லத்தில் S.I.R. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்த அதிகாரிகள் – அதிமுகவினர் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies