2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மன்னார்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர்,
தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி வேகமாக சென்று கொண்டுள்ளது என்றும் திமுகவினர் மிகப்பெரிய தோல்வி பயத்தில் உள்ளனர் என்று எல்.முருகன் கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணி திமுகவை வீட்டுக்கு அனுப்பும் என்றும் முதலமைச்சர் செயல்படாததன் விளைவாகவே லாக்கப் மரணம் நிகழ்ந்துள்ளது என்று எல்.முருகன் குற்றம் சாட்டினார்.
அதிமுக தலைமையில்தான் தேசிய ஜனநாயக கூட்டணி இயங்கும் என்றும் கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷாவும், இபிஎஸ்ஸும் பேசி முடிவெடுப்பார்கள் என எல்.முருகன் குறிப்பிட்டார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் யாரும் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது என்றும் தமிழகத்தில் அதிகாரிகளின் ஆட்சி தான் நடக்கிறது என்று எல்.முருகன் கூறினார்.
லாக்கப் மரணம் குறித்து திமுக கூட்டணி கட்சிகள் வாய் திறக்கவில்லை என்று குற்றம் சாட்டியவர், மக்களின் நலனை திமுக கூட்டணி கட்சிகள் அடகு வைத்துவிட்டனர் என்று எல்.முருகன் குற்றம் சாட்டினார்.