திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், தீவிர சோதனைக்கு பிறகே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதற்கான பல்வேறு பாதைகள் அடைக்கப்பட்டு, முதன்மை பாதை வழியாக மட்டுமே மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த வாரம் பச்சையம்மாள் என்ற பெண் தீக்குளித்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.