நெல்லையில் சீருடை அணியாத காவலர்களால் தாக்கப்பட்ட சிறுவன் - பாஜக எம்எல்ஏ நேரில் ஆறுதல்!
Mar 15, 2026, 09:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லையில் சீருடை அணியாத காவலர்களால் தாக்கப்பட்ட சிறுவன் – பாஜக எம்எல்ஏ நேரில் ஆறுதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 3, 2025, 07:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் சீருடை அணியாத காவலர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படும் 17 சிறுவனை, பாஜக எம்.எல்.ஏ காந்தி மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நெல்லை மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவரது 17 வயது மகன் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சிறுவனை வழிமறித்துள்ளனர்.

பின்னர் சீருடை அணியாத நிலையில் தங்களை ஸ்ரீவைகுண்டம் தனிப்படை போலீசார் என அறிமுகப்படுத்திக்கொண்ட அவர்கள், சிறுவனிடம் அவரது தந்தை குறித்து வினவியதாக கூறப்படுகிறது.

அப்போது தந்தை குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக்கூறிய சிறுவனை, அவர்கள் வலுக்கட்டாயமாக காவல் நிலையம் அழைத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது தப்பியோட முயன்ற சிறுவனை இருவரும் கை மற்றும் லத்தியால் கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

அவர்களிடம் இருந்து ஒருவழியாக தப்பியோடிய சிறுவன் வீட்டிற்கு சென்றபோது கழுத்து வலியால் அவதிப்பட்டுள்ளார்.

அதனடிப்படையில் குடும்பத்தார் சிறுவனை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற நிலையில், அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே சம்பவம் தொடர்பாக சிறுவன் தரப்பில் இருந்து ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக இதுவரை வழக்குப்பதிவு ஏதும் செய்யாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனையும், அவரது குடும்பத்தாரையும் பாஜக எம்.எல்.ஏ-வான எம்.ஆர் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக இல்லை எனவும், முதலமைச்சர் தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையை கவனமாக கையாள தவறி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Tags: NellaiMeenakshipuramBJP MLA Gandhiboy attacked by special team
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் மழைநீர் வடிகாலில் தீக்காயங்களுடன் விழுந்து கிடந்த இருவர் மீட்பு – வியாபாரிக்கு குவியும் பாராட்டு!

Next Post

ரிதன்யா தற்கொலை விவகாரம் – தாய் உண்ணாவிரதம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies