சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!
Oct 19, 2025, 04:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Jul 3, 2025, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாநகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையில் பெருமளவு கசிவு ஏற்பட்டிருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் முன்பாகவே போதுமான நிதியை ஒதுக்கி அணையைப் பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரள மாநிலத்தின் பாலக்காட்டில் இருந்து 46 கிலோ மீட்டர் தொலைவிலும், தமிழகத்தின் கோவை மாவட்டத்தின் மேற்கே 35 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது இந்த சிறுவாணி அணை. மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி வடக்கு நோக்கிப் பாய்ந்து பவானி ஆற்றில் கலக்கும் நீரை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போது அணைக் கட்டி சேமிக்கப்பட்டது.

1970 களில் கோவை நகரின் நீர்ப்பற்றாக்குறையைப் போக்கத் தமிழகம் மற்றும் கேரளம் ஆகிய இரு மாநிலங்களும் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படி பழைய அணைக்குக் கீழ்ப்பகுதியில் புதியதாகப் பெரிய சிறுவாணி அணை கட்டப்பட்டது.

சிறுவாணி அணையின் நீர்த்தேக்க அளவு 50 அடி என்றாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக 45 அடி வரை மட்டுமே மட்டுமே தேக்கி வைக்கப்படுகிறது. ஆனால் அண்மைக்காலமாக நீர் மட்டம் 44 அடியை நெருங்கும் முன்பே தண்ணீரை வெளியேற்றுவதால் கோடைக்காலத்தில் கோவையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கோவை மாநகரின் பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணியின் குறுக்கே புதிய அணைகட்ட கேரள அரசு முயற்சி செய்வதாகப் புகார் எழுந்த நிலையில் தமிழகம் முழுவதும் பெரும் எதிர்ப்பு அலைகள் எழுந்தன.

ஆனால் தற்போது சிறுவாணி அணையில் அதிகப்படியான கசிவு ஏற்படுவதாக அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களும் வெளியாகியுள்ளன. அணையில் ஏற்பட்டுள்ள கசிவைத் தமிழக அரசு அலட்சியமாகக் கருதாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அணைகளின் பராமரிப்பு பணியில் அனுபவம் கொண்ட ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்

அணையில் 45 அடி வரை தண்ணீரைத் தேக்குவதற்கான சூழல் இருந்தாலும் அதனைச் செய்யாமல் வேண்டுமென்றே தண்ணீரைத் திறந்துவிட்டு தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறையைச் செயற்கையாக ஏற்படுத்தும்  முயற்சியில் கேரள அரசு இறங்கியிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதே நேரத்தில் கேரள அரசின் முயற்சிக்கு இணங்காமல் உரிய நிதியை ஒதுக்கி சிறுவாணி அணையைப் பலப்படுத்தும் பணியை மேற்கொண்டு கோடைக்காலத்தில் கோவை மாநகர மக்களுக்கு ஏற்படவிருக்கும் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Leak in Siruvani Dam?: Farmers urge to allocate funds and strengthen the damசிறுவாணி அணையில் கசிவுவிவசாயிகள் வலியுறுத்தல்
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

Next Post

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

Related News

பெற்றோர்களே உஷார் : எல்லை மீறும் ChatGPT- சிறப்பு தொகுப்பு!

ஆற்காடு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் – அவசர அவசரமாக திறக்கப்பட்ட பாலம்!

திக்…திக்..திக்…சிதிலமடைந்த குடியிருப்புகள்.. திகிலுடன் வாழும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜனுக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு!

இந்தியாவின் ராஜதந்திரம் : பாகிஸ்தானுக்கு சொல்லும் செய்தி என்ன? சிறப்பு தொகுப்பு!

சொந்த ஊர் செல்ல போதுமான பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி – அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது – நிர்மலா சீதாராமன் பேட்டி!

தீபாவளி பண்டிகை உற்சாகம் – சென்னையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்  பட்டாசுகளை வாங்க குவிந்த மக்கள்!

உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – பொதுமக்கள் குளிக்க தடை!

தமிழகத்தில் 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14, 808 கோடி செலவிடப்படாமல் திரும்ப பெறப்பட்டுள்ளது!

திருவாடானை அருகே லஞ்சம் கேட்டு மிரட்டும் வருவாய் ஆய்வாளர்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் – செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

3 மாத அரிசியை வழங்க மத்திய அரசு உத்தரவு – ஒரு மாத அரிசியை மட்டும் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு!

கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் PERFORMANCE CAR பிரிவு திறப்பு!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணை – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்கள் – ஆற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies