சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!
Sep 12, 2026, 01:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Jul 3, 2025, 08:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை மாநகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையில் பெருமளவு கசிவு ஏற்பட்டிருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் முன்பாகவே போதுமான நிதியை ஒதுக்கி அணையைப் பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரள மாநிலத்தின் பாலக்காட்டில் இருந்து 46 கிலோ மீட்டர் தொலைவிலும், தமிழகத்தின் கோவை மாவட்டத்தின் மேற்கே 35 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது இந்த சிறுவாணி அணை. மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி வடக்கு நோக்கிப் பாய்ந்து பவானி ஆற்றில் கலக்கும் நீரை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போது அணைக் கட்டி சேமிக்கப்பட்டது.

1970 களில் கோவை நகரின் நீர்ப்பற்றாக்குறையைப் போக்கத் தமிழகம் மற்றும் கேரளம் ஆகிய இரு மாநிலங்களும் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படி பழைய அணைக்குக் கீழ்ப்பகுதியில் புதியதாகப் பெரிய சிறுவாணி அணை கட்டப்பட்டது.

சிறுவாணி அணையின் நீர்த்தேக்க அளவு 50 அடி என்றாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக 45 அடி வரை மட்டுமே மட்டுமே தேக்கி வைக்கப்படுகிறது. ஆனால் அண்மைக்காலமாக நீர் மட்டம் 44 அடியை நெருங்கும் முன்பே தண்ணீரை வெளியேற்றுவதால் கோடைக்காலத்தில் கோவையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கோவை மாநகரின் பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணியின் குறுக்கே புதிய அணைகட்ட கேரள அரசு முயற்சி செய்வதாகப் புகார் எழுந்த நிலையில் தமிழகம் முழுவதும் பெரும் எதிர்ப்பு அலைகள் எழுந்தன.

ஆனால் தற்போது சிறுவாணி அணையில் அதிகப்படியான கசிவு ஏற்படுவதாக அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களும் வெளியாகியுள்ளன. அணையில் ஏற்பட்டுள்ள கசிவைத் தமிழக அரசு அலட்சியமாகக் கருதாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அணைகளின் பராமரிப்பு பணியில் அனுபவம் கொண்ட ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்

அணையில் 45 அடி வரை தண்ணீரைத் தேக்குவதற்கான சூழல் இருந்தாலும் அதனைச் செய்யாமல் வேண்டுமென்றே தண்ணீரைத் திறந்துவிட்டு தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறையைச் செயற்கையாக ஏற்படுத்தும்  முயற்சியில் கேரள அரசு இறங்கியிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதே நேரத்தில் கேரள அரசின் முயற்சிக்கு இணங்காமல் உரிய நிதியை ஒதுக்கி சிறுவாணி அணையைப் பலப்படுத்தும் பணியை மேற்கொண்டு கோடைக்காலத்தில் கோவை மாநகர மக்களுக்கு ஏற்படவிருக்கும் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Leak in Siruvani Dam?: Farmers urge to allocate funds and strengthen the damசிறுவாணி அணையில் கசிவுவிவசாயிகள் வலியுறுத்தல்
Share
Tweet
SendShare
Previous Post

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

Next Post

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies