குவியும் மோசடி புகார் - யார் இந்த நிகிதா?
Apr 29, 2026, 06:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

Murugesan M by Murugesan M
Jul 3, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மடப்புரம் கோயில் காவலாளி லாக்கப் கொலை வழக்கில் புகார் கொடுத்த பேராசிரியை நிகிதா பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. யார் அந்த நிகிதா ? அவர் மீது எழுந்திருக்கும் மோசடி புகார்கள் என்ன என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்தில் கோயில் காவலாளி அஜித்குமார் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள நிலையில், கோயில் தொழிலாளி மீது திருட்டு புகார் அளித்த மதுரையைச் சேர்ந்த பேராசிரியை நிகிதாவின் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.

மடப்புரம் கோவிலுக்குச் சென்ற போது தன் நகையைத் திருடியதாக அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா திண்டுக்கல்லில் உள்ள கலைக்கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆலம்பட்டியைச் சேர்ந்த நிகிதாவின் தந்தை உதவி ஆட்சியராக பணிபுரிந்து ஓய்வுபெற்றுள்ளார்.

தந்தையின் அரசுப் பணியை வைத்து 2011 ஆம் ஆண்டு முதல் அரசு வேலை வாங்கித்தருவதாகப் பலரிடம் நிகிதா பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதோடு மதுரை திருமங்கலம் காவல்நிலையத்திலும் நிகிதா, அவரது தந்தை ஜெயப்பெருமாள், தாய் சிவகாமி, அண்ணன் கவியரசு என ஒட்டுமொத்த குடும்பத்தினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுக் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆலம்பட்டியில் உள்ள வீட்டைத் தனியார் கல்லூரி நிர்வாக மேலாளர் ஒருவருக்கு 70 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ய ஒப்புக்கொண்டு முதற்கட்டமாக 25 லட்ச ரூபாயைப் பெற்றுக் கொண்ட நிகிதா, பின்னர் மதுரை வங்கி ஒன்றில் அதே வீட்டை 50 லட்ச ரூபாய்க்கு அடமானம் வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மதுரை செக்காணூரனி அருகே தேங்கல்பட்டியைச் சேர்ந்த செல்வத்திடம் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி 25 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் உதவியாளர்கள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ். ஆர் ஆகியோரிடம் தனக்குப் பழக்கம் இருப்பதாகவும் அவர்களிடம் பேசி அரசுவேலை வாங்கித் தருவதாகப் பலரை நிகிதா ஏமாற்றியிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பணத்தை வாங்கிக்கொண்டு நீண்ட நாட்களாக அரசு வேலை வாங்கித்தராத நிகிதாவை தொடர்பு கொண்ட போது மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவிக்கின்றனர்.

சென்னை, மதுரை, கோவை, கரூர் என பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடமும் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்ச ரூபாயை நிகிதா பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. திருப்புவனத்தில் நகை திருட்டு என்பது கூட பொய்யான தகவலாக இருக்கலாம் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மடப்புரம் கோயில் காவலாளி விவகாரத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் மூலம் நிகிதா அழுத்தம் கொடுத்ததாகவும், அதன் காரணமாகவே அஜித்குமார் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. யார் அந்த ஐஏஎஸ் அதிகாரி? அவருக்கும் நிகிதாவுக்கும் என்ன தொடர்பு? என்ற கேள்வியை அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

அதோடு, உயிரிழந்த அஜித்குமாரின் உறவினர்களுக்கு 50 லட்சம் வரை பேரம் பேசியதும், அதில் திமுக நிர்வாகிகள் இருந்திருப்பதும், இவ்விவகாரத்தில் திமுகவின் உயர்மட்ட தலைவர்களுக்கும் தொடர்பிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நகை திருட்டு வழக்கில் புகார் அளித்த நிகிதாவின் அடுக்கடுக்கான மோசடிகள் வெளிச்சத்திற்கு வரும் நிலையில் விசாரணை வளையத்திற்குள் நிகிதா கொண்டு வரப்படுவாரா ? என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

Tags: சிவகங்கை மாவட்டம்திருப்புவனம்Accumulating fraud complaints - who is this Nikita?குவியும் மோசடி புகார்காவலாளி அஜித்குமார் கொலைNEWS TODAYlatest newstoday newscrime news today
ShareTweetSendShare
Previous Post

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

Next Post

மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!

Related News

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கோடை வெயில் எதிரொலி – டெல்லியில் பள்ளிகள் நேரம் மாற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies