மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!
Jul 22, 2026, 06:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!

Murugesan M by Murugesan M
Jul 3, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விவசாயத்தில் ஏற்படும் தொடர் நஷ்டத்தைத் தவிர்க்க டிராகன் புரூட்ஸ் எனும் மருத்துவ குணமிக்க பழத்தைச் சாகுபடி செய்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் ஓசூரைச் சேர்ந்த விவசாயி கோபி.  குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டும் டிராகன் பழ விவசாயம் குறித்தும் அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஓசூர் அருகே உள்ள உத்தனப்பள்ளியைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீராமுலுவுக்கு ராகி, அவரை, துவரை உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்வதுதான் பிரதான தொழிலாக இருந்துவந்துள்ளது.

தண்ணீர் பற்றாக்குறை, விளைச்சல் பாதிப்பு, உரிய விலையின்மை என அடுத்தடுத்து நெருக்கடிகளால் பெரும் நஷ்டத்தையே ஸ்ரீராமுலு சந்தித்து வந்துள்ளார். தந்தையின் நிலையைப் பார்த்து மனமுடைந்த மகன் கோபி, டிராகன்  எனும் மருத்துவ குணம் கொண்ட பழங்களைச் சாகுபடி செய்யும் முயற்சியில் இறங்கினார். தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் குறைவான செலவில் டிராகன் பழங்கள் விவசாயத்தை மேற்கொண்டதால் தனக்கு அதிகளவிலான லாபம் கிடைத்திருப்பதாகவும் கோபி தெரிவிக்கிறார்.

கோபியும் அவரது தந்தை ஸ்ரீராமுலும் இணைந்து கர்நாடகம், குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு நேரில் சென்று டிராகன் செடிகளைப் பயிரிடும் முறைகள் குறித்து போதுமான பயிற்சியைப் பெற்றுள்ளனர். முதலில் ஒரு ஏக்கர் பரப்பளவில் 4.5 லட்ச ரூபாய் செலவு செய்து பயிரிட்ட நிலையில், அதிக லாபம் கிடைத்ததையடுத்து அதிகளவில் பயிரிடத் தொடங்கியுள்ளனர்.

புற்றுநோய் உள்ளிட்ட 42 வகையிலான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும் ட்ராகன் பழங்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. 25 முதல் 30 ஆண்டுகள் வரை ஆயுள் கொண்ட டிராகன் செடிகளில் ஒவ்வொரு ஆண்டும் அறுவடை செய்து அதன் மூலம் லாபம் பெற்றுவரும் நிலையில் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பூச்சிமருந்தோ, ரசாயன உரங்களையோ பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் மேற்கொண்டுவருவதாகவும் கோபி தெரிவிக்கின்றார். ஒரே சாகுபடியை மேற்கொண்டு அடுத்தடுத்து நஷ்டங்களைச் சந்திக்கும் விவசாயிகளுக்கு மாற்று விவசாயத்திற்கான புதிய வழியைக் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கும் ஓசூரைச் சேர்ந்த விவசாயி கோபிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags: Success comes from thinking hard: Farmer who grows dragon fruit and accumulates profitsலாபத்தை குவிக்கும் விவசாயிடிராகன் பழம்
ShareTweetSendShare
Previous Post

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

Next Post

அடுத்த தலாய் லாமா யார்? : சீனாவின் எதிர்ப்பால் எழுந்த புதிய சர்ச்சை!

Related News

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

ராகுல் காந்தியின் மாறுபட்ட நிலைப்பாடு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றச்சாட்டு!

பழநி கோயில் நில மோசடி விவகாரம்; சிபிசிஐடி கிடுக்குப்பிடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies