அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!
Aug 28, 2025, 09:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

Web Desk by Web Desk
Jul 7, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டத்தில் உள்ள 20 காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர் அறைகளில் சிசிடிவி கேமிராக்கள் இல்லை என்ற அதிர்ச்சியூட்டும் விவரம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியாகியுள்ளது. சிசிடிவி கேமிராக்கள் இல்லாததே காவல் மரணங்களுக்கு அடிப்படை காரணமாகக் கூறப்படும் நிலையில்,  அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்களை கட்டாயப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 24 லாக்கப் மரணங்கள் அரங்கேறியுள்ளன. விசாரணை எனும் பெயரில் கண்ணியமற்ற முறையிலும், காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொள்ளும் ஒரு சில காவலர்களால் ஒட்டுமொத்த காவல்துறை மீதும் மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற காவல் மரணங்கள் நிகழக்கூடாது என்பதற்காகக் கடந்த 2020 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் காவல்நிலையங்களில் உள்ள அனைத்து அறைகளிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் மொத்தமாக 25 காவல்நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அதில் 20 காவல்நிலையங்களில் காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் சிசிடிவி கேமிராக்கள் இல்லை என்ற விவரம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையைச் சேர்ந்த அசோக் ஸ்ரீநிதி மீது காவல்நிலையத்தில் ஆய்வாளரை தரக்குறைவாக பேசி அராஜகமாக நடந்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது தான் அத்துமீறியதாக கூறப்படும் நிலையில் அது தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிடுங்கள் எனக் கோரிய போது போலீசார் மறுத்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாகக் காவல்நிலையங்களில் இருக்கும் சிசிடிவி கேமிராக்கள் தொடர்பாக அறிந்து கொள்ள தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்குக் கிடைத்த பதிலில் பெரும்பாலான காவல்நிலையங்களில் சிசிடிவி கேமிராக்களே இல்லை என்பது தெரியவந்துள்ளது.

அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமிராக்களை கட்டாயம் பொருத்த வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கோவை மாவட்ட காவல்நிலையங்கள் மீது புகார் எழுந்துள்ளன. காவல்நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் இல்லாததே காவலர்களின் அத்துமீறலுக்கு முக்கிய காரணம் எனக் கூறப்படும் நிலையில், காவல்நிலையங்களில் சிசிடிவி கேமிராக்களை கட்டாயப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: அதிர்ச்சியூட்டும் RTIசிசிடிவி கேமிராக்கள்police stationcctvtn policeShocking RTI: Police stations without CCTVசிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் விடுதிகளின் பெயரை மாற்றுவதால் மட்டும் எதுவும் நடக்கப் போவதில்லை : எல்.முருகன்

Next Post

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட திமுக அரசு மாணவர் நலனுக்காக செலவிடவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

செமி கண்டக்டர் TO போர்க்கப்பல் வரை : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

3 நாடுகளை புரட்டிப்போட்ட வெள்ளப் பேரழிவு : வருங்கால பாதிப்புகளை தடுக்கும் தீர்வு என்ன?

அமெரிக்க விசா முறையில் அதிரடி மாற்றங்கள் : இந்தியர்களுக்கு சிக்கலை அதிகரிக்கும் டிரம்ப் நிர்வாகம்!

பிரான்ஸ், ரஷ்யா வார்த்தை போர் : புதிய யுத்தத்திற்கு வித்திடுகிறதா?

செவ்வாய் கிரக வாசிகளுடன் போர் : 5079-ம் ஆண்டில் உலகம் அழியும்!

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு : கொலையாளி பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சர் கோப்பை பரிதாபங்கள் : கொந்தளிக்கும் சிலம்பாட்ட வீரர், வீராங்கனைகள்!

மின் கட்டணத்தை குறைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!

ஆம்பூர் கலவர வழக்கில் 22 பேர் குற்றவாளிகள் – திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு!

ஆளுநருக்கு ஆணை பிறப்பிக்க முடியாது – மத்திய அரசு!

ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மெட்வெதேவுக்கு ரூ.37 லட்சம் அபராதம்!

உத்தரப்பிரதேசம் : கழிவு நீர் கால்வாய்க்குள் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்த இளைஞர்!

ஐசிசி ஒருநாள் தரவரிசை – 40 இடங்கள் முன்னேறிய கேமரூன்!

வீட்டுமனை பட்டா வழங்காமல் அதிகாரிகள் அலட்சியம் : மக்கள் புகார்!

விநாயகர் சதுர்த்தி திருவிழாவை சீர்குலைக்க காவல்துறை சதி : காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!

பிரிட்ஜ்ஸ்டோன் உலக சூரிய சக்தி சவால் 2025 போட்டிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies