ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!
Jul 5, 2025, 04:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

Web Desk by Web Desk
Jul 5, 2025, 11:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசுப்பள்ளிகளில் கணினி அறிவியல் ஆய்வகங்களில் முறையான பயிற்றுநர்களை நியமிக்காமல் தனியார் நிறுவனத்தின் மூலம் ஆட்சேர்ப்பு நடத்துவதாகத் தமிழக அரசு மீது புகார் எழுந்துள்ளது. மத்திய அரசு ஒதுக்கும் நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும் எனக் கணினி அறிவியல் ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனைவருக்கும் தரமான மற்றும் சமமான கல்வி கிடைப்பதையும், ஆசிரியர் பயிற்சி மையங்களை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய அரசால் உருவாக்கப்பட்ட திட்டம் தான் சமக்ர சிக்‌ஷா அபியான் எனும் ஒருங்கிணைத்த பள்ளிக் கல்வித் திட்டம். இத்திட்டத்தின் கீழ் கணினி ஆய்வகங்களை மேம்படுத்தவும், டிஜிட்டல் கற்றல் வசதிகளை ஏற்படுத்தவும் மத்திய அரசின் மூலம் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படுகிறது.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளின் தரத்தையும் உட்கட்டமைப்பு வசதியையும் மேம்படுத்துவதோடு, கணினி  அறிவியல் பயிற்சியையும் மாணவர்களுக்கு வழங்கும் நோக்கத்தில் மத்திய அரசு ஒதுக்கிய நிதியைப் பெற்றுள்ள தமிழக அரசு, அதற்கான பயிற்சியாளர்களை நியமிக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

கணினி அறிவியல் ஆய்வகங்களில் உள்ள 14 ஆயிரத்து 400 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், தகுதி வாய்ந்த பயிற்றுனர்களை தமிழக அரசு நியமிக்க மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக அரசின் இத்தகைய செயல்பாடு நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்பதோடு, பிற பாட ஆசிரியர்களை வைத்தும், தனியார் நிறுவனத்தின் மூலம் பயிற்றுநர்களை நியமிப்பது முறையாகப் பயிற்சி பெற்ற கணினி ஆசிரியர்களுக்கு இழைக்கும் துரோகம் எனவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஜூலை 15 ஆம் தேதி அனைத்து அரசுப்பள்ளிகளிலும் கணினி அறிவியல் ஆய்வகங்கள் திட்டத்தைத் தொடங்கி வைக்கத் தமிழக அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், மத்திய அரசு வழங்கிய நிதியைத் தவறாகப் பயன்படுத்தி தனியார் நிறுவனத்தின் மூலம் ஆட்சேர்ப்பு நடத்தியிருப்பது பணிக்காகக் காத்திருக்கும் பல ஆயிரம் பட்டாதாரி ஆசிரியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே ஏமாற்று வேலையை உடனடியாக நிறுத்திவிட்டு மத்திய அரசு எந்த நோக்கத்திற்காக இந்த திட்டத்தைக் கொண்டு வந்ததோ அதே நோக்கத்திற்காக மட்டுமே செயல்படுத்த வேண்டுமெனவும் கணினி அறிவியல் ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Problem in the appointment of laboratory instructors: Opposition to the decision to hire private individualsஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல்அரசுப்பள்ளிகளில் கணினி அறிவியல்
ShareTweetSendShare
Previous Post

கள்ளச்சாராய சாவுக்கு ரூ. 10 லட்சம், காவலர்களால் கொல்லப்பட்டால் ரூ. 5 லட்சமா? – சீமான் கேள்வி!

Next Post

தென்காசி : குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு!

Related News

கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகளுக்கு கட்டாயம் உரிமம் பெற வேண்டும் : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

நீலகிரி மலை ரயில் பாதையில் ரீல்ஸ் எடுத்த இளைஞர், மன்னிப்பு கேட்டு வீடியோ!

திருமண மண்டபத்தில் கிடைத்த நகைப்பெட்டியை காவல்நிலையத்தில் ஒப்படைத்த மண்டப பணியாளர்!

Load More

அண்மைச் செய்திகள்

போரை முடிவுக்கு கொண்டு வரும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கனமழை!

புதுக்கோட்டை : மதுபோதையில் இளைஞர்கள் ரகளை – வீடியோ வைரல்!

விளைநிலத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார் – சிசிடிவி காட்சி வெளியானது!

இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

சிறுவன் கடத்தி கொலை : அலட்சியமாக நடத்திய தலைமை காவலர் ஆயுதப் படைக்கு மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிளஸ் பாதுகாப்பு – உள்துறை அமைச்சகம் உத்தரவு!

ஓசூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, விரைவில் போராட்டம் : அதிமுக கவுன்சிலர்!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies