அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு - இரு தரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!
Sep 13, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இரு தரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 6, 2025, 09:25 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா – அர்ஜென்டினா இருதரப்பு உறவு தொடர்பாக அதிபர் மிலேவுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

அரசு முறை பயணமாக பிரதமர் மோடி அர்ஜென்டினா நாட்டிற்கு சென்றார். இந்நிலையில் பியூனஸ் அயர்ஸ் நகரில் உள்ள அதிபர் மாளிகைக்கு சென்ற அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அதிபர் ஜேவியர் மிலே, பிரதமர் மோடியை ஆரத்தழுவி உற்சாகமாக வரவேற்றார்..

தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, விவசாயம், சுரங்கம், எண்ணெய், வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியும், அதிபர் மிலேவும் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஸ்பெயின் ஆட்சியில் இருந்து அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகள் விடுதலை பெற முக்கிய பங்காற்றிய சான் மார்ட்டின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து மகாத்மா காந்தி மற்றும் ரபீந்திரநாத் தாஹூர் சிலைகளுக்கும் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதிபர் மிலே மற்றும் அந்நாட்டு மக்களின் அன்பிற்கு நன்றி கூறுவதாக தெரிவித்துள்ளார். தனது அர்ஜென்டினா பயணம் பயனுள்ளதாக இருந்தது எனவும் தங்கள் விவாதங்கள் இருதரப்பு நட்புக்கு உத்வேகத்தை அளிக்கும் என நம்புவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தனது பயணம் தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து அர்ஜென்டினா பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, விமானம் மூலம் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ சென்றடைந்தார். அங்கு அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து இன்றும் நாளையும் நடைபெறும் பிரிக்ஸ் அமைப்பின் 17-வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார்.

Tags: prime minister modiExternal Affairs Minister Jaishankarargentina President Milley
Share
Tweet
SendShare
Previous Post

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

Next Post

காவல்துறைக்கு பயந்து புகார் அளிக்கவில்லை – தேவதானப்பட்டி இளைஞர் பேட்டி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies