தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான 34 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
நடிகை ரன்யா ராவ் மீதான தங்கக் கடத்தல் வழக்கு குறித்து டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மார்ச் 3-ஆம் தேதி பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், 14 கிலோ தங்கத்தைத் தனது உடலில் மறைத்துக் கடத்தி வந்த ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 2 கோடியே 67 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 2 கோடியே 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.