பம்பரமாக சுழலும் பேப்பர் தாத்தா : 94 வயதிலும் அசராத பணி - உழைப்புக்கு முன்னுதாரணம்!
Aug 26, 2025, 01:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பம்பரமாக சுழலும் பேப்பர் தாத்தா : 94 வயதிலும் அசராத பணி – உழைப்புக்கு முன்னுதாரணம்!

Web Desk by Web Desk
Jul 9, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

94 வயதுமிக்க முதியவர் ஒருவர் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் செய்தித்தாள் மற்றும் பால்பாக்கெட் விநியோகிக்கும் பணிகளைச் செய்து வருகிறார். பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் பேப்பர் தாத்தா குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சென்னையின் ஒட்டுமொத்த மக்களும் உறங்கிக் கொண்டிருக்கும் நேரமான அதிகாலை 3.30 மணி தான் இந்த தாத்தா நாள்தோறும் கண்விழிக்கும் நேரம். எழுந்தவுடன்  ராயபுரம், கோபாலபுரம், உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று தனது வாடிக்கையாளர்களின் இல்லங்களில் பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்வது தான் தாத்தாவின் முதல் பணி.

அடுத்ததாக தன்னுடைய மிதிவண்டியை மிதிக்கத் தொடங்கும் தாத்தா கோபாலபுரம், பத்மாவதி சாலை, அவ்வை சண்முகம் சாலை என பல்வேறு பகுதிகளுக்குப் பம்பரமாகச் சுழன்று செய்தித்தாள்களை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கிறார்.

முதல் பணிக்கும் இரண்டாவது பணிக்கும் இடையிலான நேரம் என்பது ஒரு தேநீர் அருந்தும் நேரம் தான் என்கிறார் சுறுசுறுப்பு மிக்க பேப்பர் தாத்தா என அழைக்கப்படும் சண்முகசுந்தரம்.

சென்னை ராயப்பேட்டையில் 1931 ஆம் ஆண்டு பிறந்த சண்முகசுந்தரம், தன்னுடைய இளமைப்பருவத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில் அதற்குப் பின் சுயமாகவே தொழில் தொடங்கி பத்து பேருக்கு வேலை கொடுத்திருக்கிறார்.

டுத்தடுத்த காலச்சூழலால் தொழில் நிறுவனம் நடத்துவதைக் கைவிட்ட சண்முகசுந்தரம், தண்ணீர் கேன் போடுவது, பால் மற்றும் செய்தித்தாள் விநியோகிக்கும் பணியைச் செய்து வருகிறார்.

மகன் மற்றும் மகள்கள் அழைத்த போதிலும் அவர்களுடன் செல்ல விரும்பாத சண்முகசுந்தரம், இன்றளவும் யார் உதவியையும் நாடாமல்  84 வயதுடைய தன் மனைவியோடு தனியாக வாழ்ந்து வருகிறார்.

உழைப்பிற்கு வயது தடை இல்லை என்பதைப் பலர் நிரூபித்திருக்கும் நிலையில், வயதும் முதுமையும் உடலுக்குத் தானே தவிர உழைப்புக்கு இல்லை எனக்கூறி தன் பணியை நாளுக்கு நாள் வேகப்படுத்திக் கொண்டிருக்கிறார் சண்முகசுந்தரம் என்ற பேப்பர் தாத்தா.

Tags: NEWS TODAYசென்னைchennai news todayThe paper-spinning grandfather: Still working hard at the age of 94 - an example of hard workபேப்பர் தாத்தா
ShareTweetSendShare
Previous Post

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா- தம்பி பலியான துயரம்!

Next Post

பிரதமருக்கு பிரேசிலின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

Related News

சீனாவுக்கு இந்தியா பதிலடி : அருணாச்சல பிரதேசத்தில் அணை கட்டும் பணி தீவிரம்!

கருப்புப் பட்டியலுக்குள்தள்ளப்படும் அபாயம் : சட்டவிரோத பரிவர்த்தனை சிக்கலில் பாகிஸ்தான்!

5ம் தலைமுறை போர் விமானம் : பிரான்ஸ் உடன் கைகோர்க்கும் இந்தியாவின் DRDO!

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு : முன்கூட்டியே எச்சரித்த இந்தியா – நல்லெண்ணத்தின் அடையாளம்!

மிஷன் சுதர்சன் சக்ரா முதல் வெற்றி : மொத்த நாட்டுக்கும் ஒரே பாதுகாப்பு கவசம்!

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

Load More

அண்மைச் செய்திகள்

விடைபெற்றார் ‘THE WALL 2.O’!

டிஜிபி நியமனத்தில் குளறுபடி : அதிகரிக்கும் அரசியல் தலையீட்டால்!

இந்தியாவின் தனித்துவமான வான் பாதுகாப்பு அமைப்பு : எதிரி ஏவுகணைகளுக்கு சிம்ம சொப்பணம்!

இணையத்தில் வெடித்த விவாதம் : உண்மையான அமுல் கேர்ள் யார்?

பளீச் ஹெல்மட்டுடன் பயணம் : சேலம் இரட்டையர்கள் கண்டுபிடித்த சாதனம்!

ரூ.70,000 கோடியில் அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள் : கடற்படையை வலுப்படுத்தும் இந்தியா!

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுவத்தில் அதிகாரிகள் அலட்சியம் – பாஜகவினர் புகார் மனு!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு – 5 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்!

தமிழக அரசு தொடங்கிய இதழியல் நிறுவனம் : திமுகவின் இளம் பேச்சாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என புகார்!

இபிஎஸ் தொடர்ந்த வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies