பம்பரமாக சுழலும் பேப்பர் தாத்தா : 94 வயதிலும் அசராத பணி - உழைப்புக்கு முன்னுதாரணம்!
Jul 7, 2025, 10:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பம்பரமாக சுழலும் பேப்பர் தாத்தா : 94 வயதிலும் அசராத பணி – உழைப்புக்கு முன்னுதாரணம்!

Web Desk by Web Desk
Jul 7, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

94 வயதுமிக்க முதியவர் ஒருவர் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் செய்தித்தாள் மற்றும் பால்பாக்கெட் விநியோகிக்கும் பணிகளைச் செய்து வருகிறார். பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் பேப்பர் தாத்தா குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சென்னையின் ஒட்டுமொத்த மக்களும் உறங்கிக் கொண்டிருக்கும் நேரமான அதிகாலை 3.30 மணி தான் இந்த தாத்தா நாள்தோறும் கண்விழிக்கும் நேரம். எழுந்தவுடன்  ராயபுரம், கோபாலபுரம், உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று தனது வாடிக்கையாளர்களின் இல்லங்களில் பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்வது தான் தாத்தாவின் முதல் பணி.

அடுத்ததாக தன்னுடைய மிதிவண்டியை மிதிக்கத் தொடங்கும் தாத்தா கோபாலபுரம், பத்மாவதி சாலை, அவ்வை சண்முகம் சாலை என பல்வேறு பகுதிகளுக்குப் பம்பரமாகச் சுழன்று செய்தித்தாள்களை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கிறார்.

முதல் பணிக்கும் இரண்டாவது பணிக்கும் இடையிலான நேரம் என்பது ஒரு தேநீர் அருந்தும் நேரம் தான் என்கிறார் சுறுசுறுப்பு மிக்க பேப்பர் தாத்தா என அழைக்கப்படும் சண்முகசுந்தரம்.

சென்னை ராயப்பேட்டையில் 1931 ஆம் ஆண்டு பிறந்த சண்முகசுந்தரம், தன்னுடைய இளமைப்பருவத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில் அதற்குப் பின் சுயமாகவே தொழில் தொடங்கி பத்து பேருக்கு வேலை கொடுத்திருக்கிறார்.

டுத்தடுத்த காலச்சூழலால் தொழில் நிறுவனம் நடத்துவதைக் கைவிட்ட சண்முகசுந்தரம், தண்ணீர் கேன் போடுவது, பால் மற்றும் செய்தித்தாள் விநியோகிக்கும் பணியைச் செய்து வருகிறார்.

மகன் மற்றும் மகள்கள் அழைத்த போதிலும் அவர்களுடன் செல்ல விரும்பாத சண்முகசுந்தரம், இன்றளவும் யார் உதவியையும் நாடாமல்  84 வயதுடைய தன் மனைவியோடு தனியாக வாழ்ந்து வருகிறார்.

உழைப்பிற்கு வயது தடை இல்லை என்பதைப் பலர் நிரூபித்திருக்கும் நிலையில், வயதும் முதுமையும் உடலுக்குத் தானே தவிர உழைப்புக்கு இல்லை எனக்கூறி தன் பணியை நாளுக்கு நாள் வேகப்படுத்திக் கொண்டிருக்கிறார் சண்முகசுந்தரம் என்ற பேப்பர் தாத்தா.

Tags: NEWS TODAYசென்னைchennai news todayThe paper-spinning grandfather: Still working hard at the age of 94 - an example of hard workபேப்பர் தாத்தா
ShareTweetSendShare
Previous Post

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட திமுக அரசு மாணவர் நலனுக்காக செலவிடவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

Related News

கட்டுப்பாட்டை இழக்கும் சீன அதிபர் : பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்காத பின்னணி!

அரிய தனிமங்களுக்கு கொடுத்த விலை : பூமியின் நரகமாக மாறிய சீன நகரம்!

“தமிழகத்தை மீட்போம்” – தாக்கத்தை ஏற்படுத்துமா EPS சுற்றுப்பயணம்?

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட திமுக அரசு மாணவர் நலனுக்காக செலவிடவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

பம்பரமாக சுழலும் பேப்பர் தாத்தா : 94 வயதிலும் அசராத பணி – உழைப்புக்கு முன்னுதாரணம்!

தமிழகத்தில் விடுதிகளின் பெயரை மாற்றுவதால் மட்டும் எதுவும் நடக்கப் போவதில்லை : எல்.முருகன்

அஜித் குமார் மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை விசாரணை!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

கைதிகளை சித்ரவதை செய்து விசாரிப்பது அவசியம் – தமிழ்நாட்டில் 91% காவலர்கள் ஆதரவு!

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், வலிமையும் நிரூபிக்கப்பட்டுள்ளது : ராஜ்நாத் சிங்

எழில் கொஞ்சும் மெரினா கடற்கரை : நீலக்கொடி அந்தஸ்து பெற தீவிர முயற்சி!

நாமக்கல்லில் ZAAROZ செயலியை தொடங்கிய ஹோட்டல் உரிமையாளர்கள்!

S.J.சூர்யாவின் கில்லர் படத்திற்கு இசையமைக்கும் A.R.ரஹ்மான்!

புரி ஜெகநாத் – விஜய் சேதுபதி கூட்டணியில் படப்பிடிப்பு தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies