பம்பரமாக சுழலும் பேப்பர் தாத்தா : 94 வயதிலும் அசராத பணி - உழைப்புக்கு முன்னுதாரணம்!
Sep 12, 2026, 12:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பம்பரமாக சுழலும் பேப்பர் தாத்தா : 94 வயதிலும் அசராத பணி – உழைப்புக்கு முன்னுதாரணம்!

Murugesan M by Murugesan M
Jul 9, 2025, 06:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

94 வயதுமிக்க முதியவர் ஒருவர் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் செய்தித்தாள் மற்றும் பால்பாக்கெட் விநியோகிக்கும் பணிகளைச் செய்து வருகிறார். பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் பேப்பர் தாத்தா குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சென்னையின் ஒட்டுமொத்த மக்களும் உறங்கிக் கொண்டிருக்கும் நேரமான அதிகாலை 3.30 மணி தான் இந்த தாத்தா நாள்தோறும் கண்விழிக்கும் நேரம். எழுந்தவுடன்  ராயபுரம், கோபாலபுரம், உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று தனது வாடிக்கையாளர்களின் இல்லங்களில் பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்வது தான் தாத்தாவின் முதல் பணி.

அடுத்ததாக தன்னுடைய மிதிவண்டியை மிதிக்கத் தொடங்கும் தாத்தா கோபாலபுரம், பத்மாவதி சாலை, அவ்வை சண்முகம் சாலை என பல்வேறு பகுதிகளுக்குப் பம்பரமாகச் சுழன்று செய்தித்தாள்களை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கிறார்.

முதல் பணிக்கும் இரண்டாவது பணிக்கும் இடையிலான நேரம் என்பது ஒரு தேநீர் அருந்தும் நேரம் தான் என்கிறார் சுறுசுறுப்பு மிக்க பேப்பர் தாத்தா என அழைக்கப்படும் சண்முகசுந்தரம்.

சென்னை ராயப்பேட்டையில் 1931 ஆம் ஆண்டு பிறந்த சண்முகசுந்தரம், தன்னுடைய இளமைப்பருவத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில் அதற்குப் பின் சுயமாகவே தொழில் தொடங்கி பத்து பேருக்கு வேலை கொடுத்திருக்கிறார்.

டுத்தடுத்த காலச்சூழலால் தொழில் நிறுவனம் நடத்துவதைக் கைவிட்ட சண்முகசுந்தரம், தண்ணீர் கேன் போடுவது, பால் மற்றும் செய்தித்தாள் விநியோகிக்கும் பணியைச் செய்து வருகிறார்.

மகன் மற்றும் மகள்கள் அழைத்த போதிலும் அவர்களுடன் செல்ல விரும்பாத சண்முகசுந்தரம், இன்றளவும் யார் உதவியையும் நாடாமல்  84 வயதுடைய தன் மனைவியோடு தனியாக வாழ்ந்து வருகிறார்.

உழைப்பிற்கு வயது தடை இல்லை என்பதைப் பலர் நிரூபித்திருக்கும் நிலையில், வயதும் முதுமையும் உடலுக்குத் தானே தவிர உழைப்புக்கு இல்லை எனக்கூறி தன் பணியை நாளுக்கு நாள் வேகப்படுத்திக் கொண்டிருக்கிறார் சண்முகசுந்தரம் என்ற பேப்பர் தாத்தா.

Tags: பேப்பர் தாத்தாNEWS TODAYசென்னைchennai news todayThe paper-spinning grandfather: Still working hard at the age of 94 - an example of hard work
Share
Tweet
SendShare
Previous Post

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா- தம்பி பலியான துயரம்!

Next Post

பிரதமருக்கு பிரேசிலின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies