பம்பரமாக சுழலும் பேப்பர் தாத்தா : 94 வயதிலும் அசராத பணி - உழைப்புக்கு முன்னுதாரணம்!
Apr 29, 2026, 09:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பம்பரமாக சுழலும் பேப்பர் தாத்தா : 94 வயதிலும் அசராத பணி – உழைப்புக்கு முன்னுதாரணம்!

Murugesan M by Murugesan M
Jul 9, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

94 வயதுமிக்க முதியவர் ஒருவர் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் செய்தித்தாள் மற்றும் பால்பாக்கெட் விநியோகிக்கும் பணிகளைச் செய்து வருகிறார். பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் பேப்பர் தாத்தா குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சென்னையின் ஒட்டுமொத்த மக்களும் உறங்கிக் கொண்டிருக்கும் நேரமான அதிகாலை 3.30 மணி தான் இந்த தாத்தா நாள்தோறும் கண்விழிக்கும் நேரம். எழுந்தவுடன்  ராயபுரம், கோபாலபுரம், உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று தனது வாடிக்கையாளர்களின் இல்லங்களில் பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்வது தான் தாத்தாவின் முதல் பணி.

அடுத்ததாக தன்னுடைய மிதிவண்டியை மிதிக்கத் தொடங்கும் தாத்தா கோபாலபுரம், பத்மாவதி சாலை, அவ்வை சண்முகம் சாலை என பல்வேறு பகுதிகளுக்குப் பம்பரமாகச் சுழன்று செய்தித்தாள்களை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கிறார்.

முதல் பணிக்கும் இரண்டாவது பணிக்கும் இடையிலான நேரம் என்பது ஒரு தேநீர் அருந்தும் நேரம் தான் என்கிறார் சுறுசுறுப்பு மிக்க பேப்பர் தாத்தா என அழைக்கப்படும் சண்முகசுந்தரம்.

சென்னை ராயப்பேட்டையில் 1931 ஆம் ஆண்டு பிறந்த சண்முகசுந்தரம், தன்னுடைய இளமைப்பருவத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில் அதற்குப் பின் சுயமாகவே தொழில் தொடங்கி பத்து பேருக்கு வேலை கொடுத்திருக்கிறார்.

டுத்தடுத்த காலச்சூழலால் தொழில் நிறுவனம் நடத்துவதைக் கைவிட்ட சண்முகசுந்தரம், தண்ணீர் கேன் போடுவது, பால் மற்றும் செய்தித்தாள் விநியோகிக்கும் பணியைச் செய்து வருகிறார்.

மகன் மற்றும் மகள்கள் அழைத்த போதிலும் அவர்களுடன் செல்ல விரும்பாத சண்முகசுந்தரம், இன்றளவும் யார் உதவியையும் நாடாமல்  84 வயதுடைய தன் மனைவியோடு தனியாக வாழ்ந்து வருகிறார்.

உழைப்பிற்கு வயது தடை இல்லை என்பதைப் பலர் நிரூபித்திருக்கும் நிலையில், வயதும் முதுமையும் உடலுக்குத் தானே தவிர உழைப்புக்கு இல்லை எனக்கூறி தன் பணியை நாளுக்கு நாள் வேகப்படுத்திக் கொண்டிருக்கிறார் சண்முகசுந்தரம் என்ற பேப்பர் தாத்தா.

Tags: பேப்பர் தாத்தாNEWS TODAYசென்னைchennai news todayThe paper-spinning grandfather: Still working hard at the age of 94 - an example of hard work
ShareTweetSendShare
Previous Post

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா- தம்பி பலியான துயரம்!

Next Post

பிரதமருக்கு பிரேசிலின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies