சத்தீஸ்கரில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 17 பேரை பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
சத்தீஸ்கரின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோர்பா மாவட்டத்தின் துகுபத்ரா கிராமத்தில் விவசாய வேலைக்குச் சென்ற 17 பேர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
வருவாய்த்துறையினர், மாவட்ட பேரிடர் மீட்புப் படையினர், போலீசார் ஆகியோர் அவர்கள் 17 பேரையும் பத்திரமாக மீட்டனர்.