திருப்பூரில் வீட்டிற்குள் புகுந்து, ஒரு லட்சம் ரூபாய் பணத்தைப் பெண் ஒருவர் திருடிச் சென்ற சம்பத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு டி.எஸ்.ஆர் லேஅவுட் ஐந்தாவது வீதியில் வசித்து வரும் ஜெயச்சந்திரன்-கஸ்தூரி தம்பதி வீட்டில், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் காணாமல் போனது.
அந்த பகுதியிலிருந்த சிசிடிவி பதிவை ஆய்வு செய்தபோது, சிறுவனுடன் பெண் ஒருவர், ஜெயச்சந்திரன்-கஸ்தூரி தம்பதி வீட்டிற்குள் வந்து சென்றது பதிவாகி இருந்தது.
இந்த வீடியோ அடிப்படையில் அந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.