பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா- தம்பி பலியான துயரம்!
Jan 14, 2026, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா- தம்பி பலியான துயரம்!

Murugesan M by Murugesan M
Jul 8, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் மூன்று மாணவர்கள் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனந்தமாய் பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் சடலமாகத் திரும்பியதைக் கண்டு பெற்றோர் மீளா துயரில் மூழ்கியுள்ளனர்.

உருக்குலைந்து கோரமாய் கிடந்த பள்ளி வேன்… உடல் சிதறி பலியான பிஞ்சுகள்… தூக்கிவீசப்பட்டதில் துடித்த மாணவர்கள் எனப் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கும் இந்த காட்சிகள் செம்மங்குப்பம் விபத்தை கண்முன்னே நிறுத்துகின்றன.

கடலூர் – நெல்லிக்குப்பம் சாலை பகுதியில் உள்ள கிருஷ்ணசாமி மெட்குலேசன் பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். வழக்கம் போல் சின்னக்காட்டுசாகை, தொண்டமாநத்தம் கிராமங்களில் இருந்து நான்கு மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளி வேன் ஒன்று, செம்மங்குப்பம் ரயில்வே கேட்டை நோக்கி சென்றது.

ரயில்வே கேட் இருக்கும் இடம் மேடான பகுதி என்பதால், ரயில் வருவது ஓட்டுநருக்குத் தெரியவில்லை. ரயில் வருவதைக் கவனிக்காமல், ஓட்டுநர் பள்ளி வேனை இயக்க அசுர வேகத்தில் மோதியது மாயவரம் பயணிகள் ரயில்.

இதில் உருக்குலைந்த வேன், 50 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, 20 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் வேனில் இருந்த 11ம் வகுப்பு மாணவி ஷாருமதி, 6ம் வகுப்பு மாணவர் நிவாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வேன் காற்றில் பறந்த காட்சியைப் பார்த்து மிரண்டுபோன செம்மங்குப்பத்தைச் சேர்ந்த அண்ணாதுரை மாணவர்களை காப்பாற்ற ஓடினார். அப்போது மின் வயர் அறுந்து விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். விபத்தில் சிக்கிய  10 வகுப்பு மாணவர்கள் செழியன், விஸ்வேஷ், ஓட்டுநர் சங்கர், உதவியாளர் உள்பட 5 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த மாணவர் செழியன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிர் பிரிந்தது. விபத்தில் பலியான ஷாருமதியும், செழியனும் உடன்பிறந்த அக்காள் – தம்பி என்பது அவரது பெற்றோரையும் சின்னகாட்டுசாகை கிராமத்தையும் மீளா துயரத்தில் தள்ளியுள்ளது.

Tags: Train hits school van in fatal accident: Tragedy as two siblings from the same family dietoday train accidentVan accident todayபள்ளி வேன்
ShareTweetSendShare
Previous Post

ரூ.200 கோடி வரிகுறைப்பு மோசடி : மதுரையில் கூண்டோடு சிக்கிய திமுகவினர்!

Next Post

பம்பரமாக சுழலும் பேப்பர் தாத்தா : 94 வயதிலும் அசராத பணி – உழைப்புக்கு முன்னுதாரணம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies