பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா- தம்பி பலியான துயரம்!
Jul 8, 2025, 11:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா- தம்பி பலியான துயரம்!

Web Desk by Web Desk
Jul 8, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் மூன்று மாணவர்கள் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனந்தமாய் பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் சடலமாகத் திரும்பியதைக் கண்டு பெற்றோர் மீளா துயரில் மூழ்கியுள்ளனர்.

உருக்குலைந்து கோரமாய் கிடந்த பள்ளி வேன்… உடல் சிதறி பலியான பிஞ்சுகள்… தூக்கிவீசப்பட்டதில் துடித்த மாணவர்கள் எனப் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கும் இந்த காட்சிகள் செம்மங்குப்பம் விபத்தை கண்முன்னே நிறுத்துகின்றன.

கடலூர் – நெல்லிக்குப்பம் சாலை பகுதியில் உள்ள கிருஷ்ணசாமி மெட்குலேசன் பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். வழக்கம் போல் சின்னக்காட்டுசாகை, தொண்டமாநத்தம் கிராமங்களில் இருந்து நான்கு மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளி வேன் ஒன்று, செம்மங்குப்பம் ரயில்வே கேட்டை நோக்கி சென்றது.

ரயில்வே கேட் இருக்கும் இடம் மேடான பகுதி என்பதால், ரயில் வருவது ஓட்டுநருக்குத் தெரியவில்லை. ரயில் வருவதைக் கவனிக்காமல், ஓட்டுநர் பள்ளி வேனை இயக்க அசுர வேகத்தில் மோதியது மாயவரம் பயணிகள் ரயில்.

இதில் உருக்குலைந்த வேன், 50 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, 20 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் வேனில் இருந்த 11ம் வகுப்பு மாணவி ஷாருமதி, 6ம் வகுப்பு மாணவர் நிவாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வேன் காற்றில் பறந்த காட்சியைப் பார்த்து மிரண்டுபோன செம்மங்குப்பத்தைச் சேர்ந்த அண்ணாதுரை மாணவர்களை காப்பாற்ற ஓடினார். அப்போது மின் வயர் அறுந்து விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். விபத்தில் சிக்கிய  10 வகுப்பு மாணவர்கள் செழியன், விஸ்வேஷ், ஓட்டுநர் சங்கர், உதவியாளர் உள்பட 5 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த மாணவர் செழியன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிர் பிரிந்தது. விபத்தில் பலியான ஷாருமதியும், செழியனும் உடன்பிறந்த அக்காள் – தம்பி என்பது அவரது பெற்றோரையும் சின்னகாட்டுசாகை கிராமத்தையும் மீளா துயரத்தில் தள்ளியுள்ளது.

Tags: Train hits school van in fatal accident: Tragedy as two siblings from the same family dietoday train accidentVan accident todayபள்ளி வேன்
ShareTweetSendShare
Previous Post

ரூ.200 கோடி வரிகுறைப்பு மோசடி : மதுரையில் கூண்டோடு சிக்கிய திமுகவினர்!

Next Post

பாகிஸ்தானை ஏமாற்றிய ரஃபேல் : இந்தியாவின் கண்ணாமூச்சி – பாராட்டி தள்ளும் மேற்குலகம்!

Related News

பாகிஸ்தானை ஏமாற்றிய ரஃபேல் : இந்தியாவின் கண்ணாமூச்சி – பாராட்டி தள்ளும் மேற்குலகம்!

ரூ.200 கோடி வரிகுறைப்பு மோசடி : மதுரையில் கூண்டோடு சிக்கிய திமுகவினர்!

கட்டுப்பாட்டை இழக்கும் சீன அதிபர் : பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்காத பின்னணி!

அரிய தனிமங்களுக்கு கொடுத்த விலை : பூமியின் நரகமாக மாறிய சீன நகரம்!

“தமிழகத்தை மீட்போம்” – தாக்கத்தை ஏற்படுத்துமா EPS சுற்றுப்பயணம்?

காத்திருக்கும் சுற்றுலாப்பயணிகள் : கல்லாறு பழ பண்ணை மீண்டும் திறக்கப்படுமா?

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா- தம்பி பலியான துயரம்!

சமூக நீதி விடுதிகளின் அவலம் : பெயரை மாற்றினால் துயரம் தீருமா என கொந்தளிப்பு!

பொன்முடிக்கு எதிரான வழக்கில் நீதிபதி காட்டம்!

செம்மங்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை : தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு!

விபத்தின்போது ரயில்வே கேட் திறந்து இருந்தது : உயிர் தப்பிய பள்ளி மாணவர் விஸ்வேஷ் பேட்டி!

முதலமைச்சர் பொறுப்புடன் செயல்படுவாரா? : அண்ணாமலை

அஜித்குமாரின் நண்பர் மீதும் தாக்குதல் : மருத்துவமனையில் அனுமதி!

கன்னியாகுமரி : ஜெபம் செய்வதாக கூறி இளம் பெண்ணிடம் அத்துமீறிய மதபோதகர் கைது!

சென்னை அண்ணா சாலையில் பகுதிநேர ஆசிரியர்கள் சிறை நிரப்பும் போராட்டம்!

ரிதன்யா தற்கொலைக்கு விரைவான நடவடிக்கை தேவை – நடிகை அம்பிகா வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies