டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
தலைநகர் டெல்லியில் காலை 9 மணியளவில் 15 விநாடிகளுக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவானதாகத் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி மட்டுமின்றி, உத்தரப்பிரதேசத்தின் நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதால், வீடுகளில் இருந்து மக்கள் வெளியேறி, வீதிகளில் தஞ்சமடைந்தனர்.