முதலமைச்சர் பதவி யாருக்கு? : கர்நாடகாவில் நாற்காலி சண்டை!
Oct 14, 2025, 03:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

முதலமைச்சர் பதவி யாருக்கு? : கர்நாடகாவில் நாற்காலி சண்டை!

Web Desk by Web Desk
Jul 11, 2025, 02:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் பதவிக்கான நாற்காலி சண்டை விஸ்வரூபம் எடுத்துள்ளது. முதலமைச்சர் பதவியை விட்டுத்தர சித்தராமையா மறுப்பதால்,  துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கி இருப்பது கர்நாடக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.

கர்நாடகாவில் முதலமைச்சர் நாற்காலிக்கான புகைச்சல், தற்போது கொளுத்து விட்டு எரியத் தொடங்கியிருக்கிறது. துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்  முதலமைச்சராக வேண்டும் எனக் கூறும் அவரது ஆதரவாளர்கள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

கர்நாடக சட்டப்பேரவைக்குக் கடந்த 2023ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சர் பதவி யாருக்கு என்பதில் சித்தராமையாவுக்கும், காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகக் கருதப்பட்ட டி.கே.சிவக்குமாருக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவியது. நீண்ட இழுபறிக்குப் பின், காங்கிரஸ் மேலிடம் தலையிட்டதால் சமரசம் ஏற்பட்டு, முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்றனர்.

இருவரும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் நாற்காலியில் அமர உடன்பாடு எட்டப்பட்டதாக அப்போது தகவல்கள் வெளியாகின. தற்போது இரண்டரை ஆண்டுகள் முடிந்த நிலையில், டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்கள் ஒப்பந்தப்படி, முதலமைச்சர் சித்தராமையா பதவி விலக வேண்டும், டி.கே.சிவக்குமாரை முதலமைச்சராக்க வேண்டும் எனக் கொக்கரித்து வருகின்றனர்.

பிரச்சனை பூதாகரமான நிலையில், முதலமைச்சர் பதவி குறித்து அமைச்சர்களோ, எம்எல்ஏக்களோ பொதுவெளியில் வாய் திறக்கக் கூடாது என்று காங்கிரஸ் மேலிடம் கடிவாளம் போட்டது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதலமைச்சர் சித்தராமையாவும், துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரும் டெல்லியில் முகாமிட்டனர். இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, தாம் தான் கர்நாடகாவின் முதலமைச்சர் என்றும், கர்நாடகாவில் முதலமைச்சர் பதவி காலியாக இல்லை என்றும் கூறினார்.

கர்நாடக அரசியலில் செப்டம்பருக்குப் பின் தலைகீழ் திருப்பம் ஏற்படும் என அம்மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா கூறியிருந்த நிலையில், டி.கே.சிவக்குமாருக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் எம்.எல்.ஏ. இக்பால் ஹுசேன், தங்களுக்கு 100 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

தற்போது சித்தராமையா முதலமைச்சர் பதவி காலியாக இல்லை என்று கூறியிருப்பது டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Tags: Who will be the Chief Minister?: Chair fight in Karnatakaகர்நாடகாவில் நாற்காலி சண்டை
ShareTweetSendShare
Previous Post

திண்டுக்கல் : உறவினருடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் படுகொலை!

Next Post

புனித நீராடி கன்வார் யாத்திரையை தொடங்கிய பக்தர்கள்!

Related News

படுபாதாளத்தில் பாகிஸ்தான் : கடையை சாத்தும் MNC நிறுவனங்கள்!

ரூ.40000 வரை விலையுயர்ந்த விமான டிக்கெட் – பயணிகள் அதிர்ச்சி!

யார் இந்த அஜய் ரஸ்தோகி?

ஐயப்பன் கோயில் தங்க கவசம் வழக்கு : சென்னையில் கேரள போலீசார் விசாரணை!

இந்தியா சிறந்த நாடு : பிரதமர் மோடி சிறந்த நண்பர் – டிரம்ப் புகழாரம்!

இந்தியாவுக்கு சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ரோந்து காவல் வாகனம் மீது மோதிய திமுக பிரமுகரின் சொகுசு கார்!

நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்த பாக். பிரதமர் – மெலோனி ரியாக்சன் வைரல்!

ஸ்ரீசன் ஃபார்மா நிறுவனத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

தவெக தலைவர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தினார் ஆனந்த்!

சீனா : பள்ளிகளில் முதன்முறையாக இந்தி பாடம் கற்பித்தல் தொடக்கம்!

அனைவரும் ஒன்றுபட வேண்டும் : ஜி.கே.மணி பேட்டி!

சட்டப்பேரவை வளாகத்தில் அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டம்!

காசா பணயக் கைதிகள் விடுதலை நிம்மதி அளிக்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

Al ChatBot-களிடம் இருந்து குழந்தைகளை பாதுகாக்க புதிய சட்டம்!

ஜப்பான் ஸ்குவாஷ் ஓபன் : ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies