முதலமைச்சர் பதவி யாருக்கு? : கர்நாடகாவில் நாற்காலி சண்டை!
Jan 14, 2026, 02:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

முதலமைச்சர் பதவி யாருக்கு? : கர்நாடகாவில் நாற்காலி சண்டை!

Murugesan M by Murugesan M
Jul 11, 2025, 02:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் பதவிக்கான நாற்காலி சண்டை விஸ்வரூபம் எடுத்துள்ளது. முதலமைச்சர் பதவியை விட்டுத்தர சித்தராமையா மறுப்பதால்,  துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கி இருப்பது கர்நாடக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.

கர்நாடகாவில் முதலமைச்சர் நாற்காலிக்கான புகைச்சல், தற்போது கொளுத்து விட்டு எரியத் தொடங்கியிருக்கிறது. துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்  முதலமைச்சராக வேண்டும் எனக் கூறும் அவரது ஆதரவாளர்கள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

கர்நாடக சட்டப்பேரவைக்குக் கடந்த 2023ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சர் பதவி யாருக்கு என்பதில் சித்தராமையாவுக்கும், காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகக் கருதப்பட்ட டி.கே.சிவக்குமாருக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவியது. நீண்ட இழுபறிக்குப் பின், காங்கிரஸ் மேலிடம் தலையிட்டதால் சமரசம் ஏற்பட்டு, முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்றனர்.

இருவரும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் நாற்காலியில் அமர உடன்பாடு எட்டப்பட்டதாக அப்போது தகவல்கள் வெளியாகின. தற்போது இரண்டரை ஆண்டுகள் முடிந்த நிலையில், டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்கள் ஒப்பந்தப்படி, முதலமைச்சர் சித்தராமையா பதவி விலக வேண்டும், டி.கே.சிவக்குமாரை முதலமைச்சராக்க வேண்டும் எனக் கொக்கரித்து வருகின்றனர்.

பிரச்சனை பூதாகரமான நிலையில், முதலமைச்சர் பதவி குறித்து அமைச்சர்களோ, எம்எல்ஏக்களோ பொதுவெளியில் வாய் திறக்கக் கூடாது என்று காங்கிரஸ் மேலிடம் கடிவாளம் போட்டது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதலமைச்சர் சித்தராமையாவும், துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரும் டெல்லியில் முகாமிட்டனர். இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, தாம் தான் கர்நாடகாவின் முதலமைச்சர் என்றும், கர்நாடகாவில் முதலமைச்சர் பதவி காலியாக இல்லை என்றும் கூறினார்.

கர்நாடக அரசியலில் செப்டம்பருக்குப் பின் தலைகீழ் திருப்பம் ஏற்படும் என அம்மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா கூறியிருந்த நிலையில், டி.கே.சிவக்குமாருக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் எம்.எல்.ஏ. இக்பால் ஹுசேன், தங்களுக்கு 100 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

தற்போது சித்தராமையா முதலமைச்சர் பதவி காலியாக இல்லை என்று கூறியிருப்பது டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Tags: Who will be the Chief Minister?: Chair fight in Karnatakaகர்நாடகாவில் நாற்காலி சண்டை
ShareTweetSendShare
Previous Post

திண்டுக்கல் : உறவினருடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் படுகொலை!

Next Post

புனித நீராடி கன்வார் யாத்திரையை தொடங்கிய பக்தர்கள்!

Related News

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies