எமனாக மாறிய தந்தை - இளம் வீராங்கனை கொலையின் பின்னணி!
Oct 11, 2025, 07:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

எமனாக மாறிய தந்தை – இளம் வீராங்கனை கொலையின் பின்னணி!

Web Desk by Web Desk
Jul 11, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இளம் டென்னிஸ் வீராங்கனை ஒருவர், பெற்ற தந்தையாலேயே  சரமாரியாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திடுக்கிடும் சம்பவத்தின் பின்னணி. மகளைத் துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்தெடுத்த தந்தையின் பகீர் வாக்குமூலம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

பயங்கர சத்தத்துடன் வெடித்த துப்பாக்கி…. அடுத்தடுத்து பாய்ந்த குண்டுகள்… ரத்த வெள்ளத்தில் சரிந்த விழுந்த இளம்பெண்…. என எல்லாம் ஒரு நொடிக்குள் முடிந்து விட்டது. ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்டவர் இளம் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ்…

ஹரியானா மாநிலம் குருகிராமில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தீபக் யாதவ் என்பவருடைய மகளான டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ். மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகளில் விளையாடி பல்வேறு பதக்கங்களைப் பெற்றவர்.

சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் தரவரிசையில் இரட்டையர் பிரிவில் 113-வது இடத்தை தக்கவைத்திருந்தவர். தோள்பட்டை காயத்தால் டென்னிஸ் விளையாடுவதைத் தள்ளிப்போட்ட ராதிகா, ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் டென்னிஸ் அகாடமியை தொடங்கி அதனை வெற்றிகரமாக நடத்தியும் வந்துள்ளார். இன்ஸ்டாவில் ரீல்ஸ் போடுவதிலும்  அவருக்கு அலாதி பிரியம்..

சம்பவத்தன்று, வீட்டில் முதல் மாடியில் துப்பாக்கிச் சத்தம் கேட்டு,வெவ்வேறு அறைகளிலிருந்த தாயும், சகோதரர்களும் பதறியபடி ஓடிவர, சமையலறையில் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார் ராதிகா யாதவ்.  தந்தை தீபக் யாதவின் கைகளில் துப்பாக்கி இருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக  ராதிகாவை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். ஆனால் அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர்.

தகவலறிந்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். தனது மகளைத் தாம் தான் கொலை செய்ததாகத் தந்தை தீபக் யாதவ் ஒப்புக் கொண்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல  திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மகள் வருமானத்தில் வாழ்கிறாய் என ஊரார் கேலி பேச, அது தீபக் யாதவிக்கு வெந்நீர் ஊற்றியது போல் சுட்டிருக்கிறது. கூடவே ராதிகா ரீல்ஸ் போடுவதும், தீபக் யாதவுக்கு பிடிக்கவில்லை.

டென்னிஸ் அகாடமியை மூடுமாறு பல முறை ராதிகாவை வற்புறுத்தியிருக்கிறார். ரீல்ஸ் போடுவதைத் தவிர்க்குமாறு கண்டித்திருக்கிறார். ஆனால் அதற்கு ராதிகா செவிசாய்க்கவில்லை. சம்பவத்தன்று சமையலறையில் ராதிகா சமைத்துக் கொண்டிருந்தபோது, தீபக் யாதவ் அதே விஷயத்தை மீண்டும் பேச, இருவருக்கும் வாய்த் தகராறு முற்றியிருக்கிறது.

ஆத்திரமடைந்த தீபக் யாதவ் கோபத்தின் உச்சிக்கே சென்றிருக்கிறார். தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கண் இமைக்கும் நொடியில் ராதிகாவை குறிவைக்க, குண்டுகள் அசுர வேகத்தில் பாய்ந்தன. இதைச் சற்றும் எதிர்பாராத ராதிகா உடலை அடுத்தடுத்து 3 குண்டுகள் துளைத்ததில், குருதி பெருக்கோடு, சரிந்து விழுந்தார். தீபக் யாதவின் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

ஊராரின் கேலிப் பேச்சை உதறித் தள்ளுவதை விட்டுவிட்டு, தனது ஆசை மகளை அடியோடு சாய்த்த தந்தையின் கொடூரச் செயல் ஹரியானா மாநிலத்தையே உலுக்கியுள்ளது.

Tags: crime news todayThe father who turned out to be Eman - the background to the murder of the young athleteஎமனாக மாறிய தந்தை
ShareTweetSendShare
Previous Post

நவீன் மரணம் : காவல்துறைக்கு அசிங்கம் இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Next Post

குழந்தை பெற சலுகைகளை வாரி வழங்கும் நாடுகள்!

Related News

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

நாட்டை கட்டியெழுப்புவது குடிமக்களின் பொறுப்பு – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

முஸ்லிம்களின் மக்கள் தொகை உயர்வுக்கு ஊடுருவலே காரணம் – மத்திய அமைச்சர் அமித் ஷா

2026-27 கல்வியாண்டு முதல் பள்ளி பாடங்களில் AI அறிமுகம் – மத்திய அரசு முடிவு!

உலகளவில் நிலவும் காந்தங்கள் தட்டுப்பாடு கைவிரித்த சீனா : ரூ.7,350 கோடி திட்டத்துடன் களமிறங்கிய இந்தியா!

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

Load More

அண்மைச் செய்திகள்

தருமபுரி அருகே கனமழை – நீரில் மூழ்கிய பயிர்கள்!

காசா குறித்து பேசும் முதல்வர் சொந்த மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்? – ஆர்.பி.உதயகுமார்

வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் – ஹெச். ராஜா வலியுறுத்தல்!

சீர்காழி அருகே நீர்நிலைகளில் அரசு அலுவலகங்கள் கட்ட அனுமதி வழங்கிய அதிகாரிகள் – ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

வெனிசுலா பெண்மணிக்கு “அமைதிக்கான நோபல் பரிசு” : குட்டிக்கரணம் அடித்த ட்ரம்புக்கு ஏமாற்றம்!

காவலாளி TO சாப்ட்வேர் என்ஜினீயர் : இளைஞனின் வாழ்க்கையை மாற்றிய ZOHO நிறுவனம்!

வியக்க வைத்த ராணுவ சாதன சர்வதேச மாநாடு : காட்சிப்படுத்தப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் தளவாடங்கள்!

அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள் : காலநிலை மாற்றத்தால் அபாயம்!

தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு : விதி மீறிய மருந்து நிறுவனம் – கோட்டை விட்ட தமிழக அரசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies