எமனாக மாறிய தந்தை - இளம் வீராங்கனை கொலையின் பின்னணி!
Jan 14, 2026, 02:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

எமனாக மாறிய தந்தை – இளம் வீராங்கனை கொலையின் பின்னணி!

Murugesan M by Murugesan M
Jul 11, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இளம் டென்னிஸ் வீராங்கனை ஒருவர், பெற்ற தந்தையாலேயே  சரமாரியாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திடுக்கிடும் சம்பவத்தின் பின்னணி. மகளைத் துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்தெடுத்த தந்தையின் பகீர் வாக்குமூலம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

பயங்கர சத்தத்துடன் வெடித்த துப்பாக்கி…. அடுத்தடுத்து பாய்ந்த குண்டுகள்… ரத்த வெள்ளத்தில் சரிந்த விழுந்த இளம்பெண்…. என எல்லாம் ஒரு நொடிக்குள் முடிந்து விட்டது. ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்டவர் இளம் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ்…

ஹரியானா மாநிலம் குருகிராமில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தீபக் யாதவ் என்பவருடைய மகளான டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ். மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகளில் விளையாடி பல்வேறு பதக்கங்களைப் பெற்றவர்.

சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் தரவரிசையில் இரட்டையர் பிரிவில் 113-வது இடத்தை தக்கவைத்திருந்தவர். தோள்பட்டை காயத்தால் டென்னிஸ் விளையாடுவதைத் தள்ளிப்போட்ட ராதிகா, ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் டென்னிஸ் அகாடமியை தொடங்கி அதனை வெற்றிகரமாக நடத்தியும் வந்துள்ளார். இன்ஸ்டாவில் ரீல்ஸ் போடுவதிலும்  அவருக்கு அலாதி பிரியம்..

சம்பவத்தன்று, வீட்டில் முதல் மாடியில் துப்பாக்கிச் சத்தம் கேட்டு,வெவ்வேறு அறைகளிலிருந்த தாயும், சகோதரர்களும் பதறியபடி ஓடிவர, சமையலறையில் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார் ராதிகா யாதவ்.  தந்தை தீபக் யாதவின் கைகளில் துப்பாக்கி இருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக  ராதிகாவை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். ஆனால் அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர்.

தகவலறிந்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். தனது மகளைத் தாம் தான் கொலை செய்ததாகத் தந்தை தீபக் யாதவ் ஒப்புக் கொண்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல  திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மகள் வருமானத்தில் வாழ்கிறாய் என ஊரார் கேலி பேச, அது தீபக் யாதவிக்கு வெந்நீர் ஊற்றியது போல் சுட்டிருக்கிறது. கூடவே ராதிகா ரீல்ஸ் போடுவதும், தீபக் யாதவுக்கு பிடிக்கவில்லை.

டென்னிஸ் அகாடமியை மூடுமாறு பல முறை ராதிகாவை வற்புறுத்தியிருக்கிறார். ரீல்ஸ் போடுவதைத் தவிர்க்குமாறு கண்டித்திருக்கிறார். ஆனால் அதற்கு ராதிகா செவிசாய்க்கவில்லை. சம்பவத்தன்று சமையலறையில் ராதிகா சமைத்துக் கொண்டிருந்தபோது, தீபக் யாதவ் அதே விஷயத்தை மீண்டும் பேச, இருவருக்கும் வாய்த் தகராறு முற்றியிருக்கிறது.

ஆத்திரமடைந்த தீபக் யாதவ் கோபத்தின் உச்சிக்கே சென்றிருக்கிறார். தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கண் இமைக்கும் நொடியில் ராதிகாவை குறிவைக்க, குண்டுகள் அசுர வேகத்தில் பாய்ந்தன. இதைச் சற்றும் எதிர்பாராத ராதிகா உடலை அடுத்தடுத்து 3 குண்டுகள் துளைத்ததில், குருதி பெருக்கோடு, சரிந்து விழுந்தார். தீபக் யாதவின் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

ஊராரின் கேலிப் பேச்சை உதறித் தள்ளுவதை விட்டுவிட்டு, தனது ஆசை மகளை அடியோடு சாய்த்த தந்தையின் கொடூரச் செயல் ஹரியானா மாநிலத்தையே உலுக்கியுள்ளது.

Tags: crime news todayThe father who turned out to be Eman - the background to the murder of the young athleteஎமனாக மாறிய தந்தை
ShareTweetSendShare
Previous Post

நவீன் மரணம் : காவல்துறைக்கு அசிங்கம் இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Next Post

குழந்தை பெற சலுகைகளை வாரி வழங்கும் நாடுகள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies