குழந்தை பெற சலுகைகளை வாரி வழங்கும் நாடுகள்!
Jul 28, 2026, 11:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

குழந்தை பெற சலுகைகளை வாரி வழங்கும் நாடுகள்!

Murugesan M by Murugesan M
Jul 11, 2025, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருவதையடுத்து, பல மாகாணங்களில் கர்ப்பம் தரிக்கும் பள்ளி குழந்தைகளுக்குக் குழந்தைப் பேறுக்காகவும், குழந்தை வளர்ப்புச் செலவுக்காகவும் அரசு சார்பில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. அது பற்றி ஒரு செய்தி தொகுப்பு.

2023ம் ஆண்டில் ரஷ்யாவின் கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்குச் சராசரியாக 1.41 என்ற அளவிலேதான் இருந்தது.  இது நாட்டின் மக்கள் தொகையைத் தக்க வைக்கும்  2.05 விகிதத்தை விடக் குறைவாகும். ரஷ்யாவில் மக்கள் தொகையைப் பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எடுத்துக்காட்டாக,  பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுள்ள பெண்களுக்கு, சோவியத் யூனியனின் அதிபர் ஸ்டாலின் காலத்தில் கொடுக்கப்பட்ட தாய்மை பதக்கத்தை அதிபர் புதின்  மீண்டும் கொண்டுவந்துள்ளார்.

பிரசவத்தைத்  தாமதப்படுத்தும் அல்லது அதை முற்றிலுமாக நிராகரிக்கும் பெண்கள் மீதான மறைமுகமான அல்லது வெளிப்படையான பிரச்சாரத்தையும் ரஷ்யா தடை செய்துள்ளது.  பெண்ணிய உரிமை என்ற பெயரில் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தடுக்கும் பிரச்சாரத்தைத் தடை செய்து கடந்த ஆண்டு ரஷ்ய நாடாளுமன்றம் புதிய சட்டத்தை நிறைவேற்றியது.

தனியார் மருத்துவமனைகளில் கருக்கலைப்பு மீதான கட்டுப்பாடுகள், திருமணம் மற்றும் குழந்தை வளர்ப்பை முன்னுரிமைப்படுத்துவதற்குப் பதிலாகப் பல்கலைக்கழகத்தில் படிக்கவும் தொழில்களைத் தொடரவும் தேர்வு செய்யும் பெண்களிடம் மூளைச் சலவை செய்வது போன்ற  நடவடிக்கைகளைத் தண்டனைக்கு உரியக் குற்றமாக இந்த சட்டம் தெரிவிக்கிறது.

இந்நிலையில்,ரஷ்யாவின் பல மாகாணங்களில், குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி மாணவிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது .

பள்ளியில் படிக்கும்போதே குழந்தைகளைப் பெற,  பெண்களுக்கு அரசே பணம் கொடுக்கும் திட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த திட்டத்தை, 43 சதவீத ரஷ்யர்கள் ஆதரிப்பதாகவும், 40 சதவீத ரஷ்யர்கள்  எதிர்ப்பதாகவும்  ரஷ்ய பொதுக் கருத்து ஆராய்ச்சி மையத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

ஒரு பெரிய மக்கள்தொகையை, ஒரு செழிப்பான பெரும் சக்தியின் அடையாளங்களில் ஒன்றாகக் கருதும் ரஷ்ய அதிபர் புதின், அதிகமான மக்கள்தொகை  சக்திவாய்ந்த ராணுவத்தின் மீதான கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் என்றும் நம்புகிறார்.

உக்ரைன் மீதான போர் நடவடிக்கை, நாட்டில் மக்கள்தொகை குறைவதற்கான காரணம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். உக்ரைன் போரில் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் கட்டாயமாகப் போர் காலத்துக்குச் செல்லவேண்டிய சூழலில், லட்சக் கணக்கான படித்த ரஷ்ய மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

மக்கள் தொகை சரிவது ஒரு பக்கம், போரில் உயிர்நீத்த ரஷ்யப் படைவீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மறுபக்கம் என ரஷ்யா நெருக்கடியில் உள்ளது போலவே, அமெரிக்கா உட்படப் பல உலக நாடுகளிலும் மக்கள் தொகை வெகுவாக குறைந்து வருகிறது.

2050 ஆம் ஆண்டில், உலகின் 75 சதவீதத்துக்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் மக்கள்தொகையைத் தக்க வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு மிகக் குறைந்த கருவுறுதல் அளவைக் கொண்டிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத்  தாராளமான வரிச் சலுகைகள் மற்றும் மானியங்களை ஹங்கேரி அரசு வழங்கி வருகிறது. இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் தம்பதியருக்கு,  ஒரு குழந்தைக்கு மாதந்தோறும் 11,857 ரூபாய் உதவித்தொகையாக போலந்து அரசு வழங்கி வருகிறது.

குழந்தை பெற்றெடுக்கப் பெண்களை ஊக்குவிக்கும் திட்டத்துடன், தனது நாட்டுக்குக் குடியேறும் வெளிநாட்டு மக்களுக்கு, குடியுரிமை அந்தஸ்து வழங்குவதை ஸ்பெயின் அரசு அதிகரித்துள்ளது. சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கும் இந்தச் சலுகையை ஸ்பெயின் அரசு தாராளமாக வழங்குகிறது. இந்த திட்டத்தில், லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து வரும் ஸ்பானிஷ் மொழி பேசும் கத்தோலிக்க கிறிஸ்துவர்களுக்கு முன்னுரிமை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில், குழந்தைப் பேறு அமையும் பெண்களுக்கு 4.2 லட்சம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி முடிவெடுக்கும் அதிகாரத்தை,அரசு கையில் எடுப்பதும் ஆணையிடுவதும், கட்டுப்படுத்துவதும் சரியானதா என்ற கேள்வியை சமூகவியல் அறிஞர்கள் முன்வைக்கின்றனர்.

Tags: Countries that offer incentives for having childrenவாரி வழங்கும் நாடுகள்ரஷ்யாவில் குழந்தைப் பிறப்பு விகிதம்ரஷ்யாவின் கருவுறுதல் விகிதம்russia news today
ShareTweetSendShare
Previous Post

எமனாக மாறிய தந்தை – இளம் வீராங்கனை கொலையின் பின்னணி!

Next Post

ஓரங்கட்டப்பட்ட ஜி ஜின்பிங் : முடிவுக்கு வரும் வாழ்நாள் சீன அதிபர் ஆசை!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

இந்தியாவின் முதல் காலியம் நைட்ரைடு (GaN) சிப் : சாதித்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

விஸ்வரூபம் எடுக்கும் வினாத்தாள் கசிவு விவகாரம் : பஞ்சாப் அமைச்சர்கள் பதவி விலக போர்க்கொடி – சிறப்பு தொகுப்பு!

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies