எமனாக மாறிய தந்தை - இளம் வீராங்கனை கொலையின் பின்னணி!
Sep 12, 2026, 01:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

எமனாக மாறிய தந்தை – இளம் வீராங்கனை கொலையின் பின்னணி!

Murugesan M by Murugesan M
Jul 11, 2025, 07:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இளம் டென்னிஸ் வீராங்கனை ஒருவர், பெற்ற தந்தையாலேயே  சரமாரியாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திடுக்கிடும் சம்பவத்தின் பின்னணி. மகளைத் துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்தெடுத்த தந்தையின் பகீர் வாக்குமூலம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

பயங்கர சத்தத்துடன் வெடித்த துப்பாக்கி…. அடுத்தடுத்து பாய்ந்த குண்டுகள்… ரத்த வெள்ளத்தில் சரிந்த விழுந்த இளம்பெண்…. என எல்லாம் ஒரு நொடிக்குள் முடிந்து விட்டது. ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்டவர் இளம் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ்…

ஹரியானா மாநிலம் குருகிராமில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தீபக் யாதவ் என்பவருடைய மகளான டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ். மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகளில் விளையாடி பல்வேறு பதக்கங்களைப் பெற்றவர்.

சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் தரவரிசையில் இரட்டையர் பிரிவில் 113-வது இடத்தை தக்கவைத்திருந்தவர். தோள்பட்டை காயத்தால் டென்னிஸ் விளையாடுவதைத் தள்ளிப்போட்ட ராதிகா, ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் டென்னிஸ் அகாடமியை தொடங்கி அதனை வெற்றிகரமாக நடத்தியும் வந்துள்ளார். இன்ஸ்டாவில் ரீல்ஸ் போடுவதிலும்  அவருக்கு அலாதி பிரியம்..

சம்பவத்தன்று, வீட்டில் முதல் மாடியில் துப்பாக்கிச் சத்தம் கேட்டு,வெவ்வேறு அறைகளிலிருந்த தாயும், சகோதரர்களும் பதறியபடி ஓடிவர, சமையலறையில் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார் ராதிகா யாதவ்.  தந்தை தீபக் யாதவின் கைகளில் துப்பாக்கி இருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக  ராதிகாவை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். ஆனால் அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர்.

தகவலறிந்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். தனது மகளைத் தாம் தான் கொலை செய்ததாகத் தந்தை தீபக் யாதவ் ஒப்புக் கொண்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல  திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மகள் வருமானத்தில் வாழ்கிறாய் என ஊரார் கேலி பேச, அது தீபக் யாதவிக்கு வெந்நீர் ஊற்றியது போல் சுட்டிருக்கிறது. கூடவே ராதிகா ரீல்ஸ் போடுவதும், தீபக் யாதவுக்கு பிடிக்கவில்லை.

டென்னிஸ் அகாடமியை மூடுமாறு பல முறை ராதிகாவை வற்புறுத்தியிருக்கிறார். ரீல்ஸ் போடுவதைத் தவிர்க்குமாறு கண்டித்திருக்கிறார். ஆனால் அதற்கு ராதிகா செவிசாய்க்கவில்லை. சம்பவத்தன்று சமையலறையில் ராதிகா சமைத்துக் கொண்டிருந்தபோது, தீபக் யாதவ் அதே விஷயத்தை மீண்டும் பேச, இருவருக்கும் வாய்த் தகராறு முற்றியிருக்கிறது.

ஆத்திரமடைந்த தீபக் யாதவ் கோபத்தின் உச்சிக்கே சென்றிருக்கிறார். தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கண் இமைக்கும் நொடியில் ராதிகாவை குறிவைக்க, குண்டுகள் அசுர வேகத்தில் பாய்ந்தன. இதைச் சற்றும் எதிர்பாராத ராதிகா உடலை அடுத்தடுத்து 3 குண்டுகள் துளைத்ததில், குருதி பெருக்கோடு, சரிந்து விழுந்தார். தீபக் யாதவின் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

ஊராரின் கேலிப் பேச்சை உதறித் தள்ளுவதை விட்டுவிட்டு, தனது ஆசை மகளை அடியோடு சாய்த்த தந்தையின் கொடூரச் செயல் ஹரியானா மாநிலத்தையே உலுக்கியுள்ளது.

Tags: எமனாக மாறிய தந்தைcrime news todayThe father who turned out to be Eman - the background to the murder of the young athlete
Share
Tweet
SendShare
Previous Post

நவீன் மரணம் : காவல்துறைக்கு அசிங்கம் இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Next Post

குழந்தை பெற சலுகைகளை வாரி வழங்கும் நாடுகள்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies