சென்னையில் பணி நிரந்தரம் செய்யக்கோரி 8-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
பணி நிரந்தரம் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்திக் கடந்த 8ஆம் தேதி முதல் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தின் முன்பு 8-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை, போலீசார் குண்டுகட்டாக கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.