அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைன் உடனான போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல் அளிக்காவிட்டால் அந்நாட்டின் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
புதினின் செயல்பாடுகள் ஏமாற்றம் அளிப்பதாகவும், அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு புதின் ஒப்புக்கொள்ளாவிட்டால் ரஷ்யா மீது கடுமையான வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.