காமராஜர் வாழும்போதே அவரை, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததை நாடறியும் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
மக்கள் தலைவர்களை எல்லாம் தரக்குறைவாகப் பேசி அவமதித்த, அசிங்கமான வரலாறுகள் நிறைந்த திமுக, பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களை அவமானப்படுத்த முயற்சிப்பதில் ஆச்சரியமில்லை.
ஐயா காமராஜர் வாழும்போதே அவரை, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததை நாடறியும்.
தற்போது அப்படிப் பேசினால், பொதுமக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்பதால், திருச்சி சிவா, கருணாநிதியைப் புனிதப்படுத்த முயற்சிக்கிறார்.
பொய்களையும், புரட்டுகளையும், வெறுப்புணர்வையும் தூண்டி வளர்ந்த கட்சிதான் திமுக. அத்தனை புரட்டுகளுக்கும் ஆதாரமாக, பொய் மூட்டை நெஞ்சுக்கு நீதியைத் தூக்கிக் கொண்டு வருவார்கள்.
உண்மை என்னவென்றால், அந்த நெஞ்சுக்கு நீதியை திமுக கட்சிக்காரர்கள் ஒருவர் கூட படித்ததில்லை. குறிப்பாக, நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கூறியிருப்பதை, அவரது மகனான, முதலமைச்சர் ஸ்டாலின்
அவர்களே படித்ததில்லை என்பது பலமுறை வெளிப்படையாகத் தெரிந்த உண்மை.
தனது இறுதி மூச்சு வரை, மக்களுக்காகவே வாழ்ந்த கர்மவீரர் ஐயா காமராஜர் குறித்துப் பேச, திமுகவினருக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.