புதுக்கோட்டை அருகே போலீசார் தாக்கியதில் இளைஞருக்கு கைமுறிவு - மருத்துவமனையில் அனுமதி!
Oct 23, 2025, 02:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுக்கோட்டை அருகே போலீசார் தாக்கியதில் இளைஞருக்கு கைமுறிவு – மருத்துவமனையில் அனுமதி!

Web Desk by Web Desk
Jul 18, 2025, 07:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் கோயில் கும்பாபிஷேக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தாக்கியதில் இளைஞருக்கு கைமுறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிராம்பட்டினத்தை சேர்ந்த கணேசன் எஸ்.ஆர்.பட்டணத்தில் உள்ள ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக வந்துவிட்டு சொந்த ஊர் செல்ல மீமிசல் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.

அப்போது சென்னை செல்லும் அரசு பேருந்தை நிறுத்தி அதிராம்பட்டினத்தில் நிற்குமா என்று கேட்டதால் பேருந்து ஓட்டுனருக்கும் கணேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விசாரிக்க சென்றபோது போலீஸ் என்று தெரியாமல் கணேசன் வாக்குவாதம் செய்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த போலீசார் சரமாரியாக தாக்கி விசாரணைக்காக கணேசனை போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயற்சித்தனர். அப்போது மீண்டும் கணேசன் வாக்குவாதம் செய்ததால் போலீசார் மீண்டும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் கணேசன் மயக்கமடைந்ததால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

போலீசார் தாக்கியதில் கணேசனுக்கு கைமுறிவு ஏற்பட்ட சம்பவம் அறிந்த உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனிடையே அரசு பேருந்து கண்ணாடியை கணேசன் உடைத்து சேதப்படுத்தியதாக ஓட்டுநரும், நடத்துனரும் கோட்டைப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் கணேசனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கை எலும்பு முறிவு ஏற்பட்டதால் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கணேசன் சிகிச்சை பெற்று வருவதால் அவரை அங்கேயே காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் மூன்று காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: Sri Chandana Mariamman temple festivalPudukkottaiKottayampatnamyouth was injured in police attackAdhirampatnam
ShareTweetSendShare
Previous Post

திமுக அரசின் தவறுகளை சுமக்கும் கூட்டணி கட்சிகள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Next Post

சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக நடவடிக்கை எடுத்த டி.எஸ்.பி. வாகனத்தை பறித்த திமுக அரசு – அண்ணாமலை கண்டனம்!

Related News

வாட்ஸ் அப், ஃபேஸ்புக் தளங்களில் புதிய மோசடி : பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்திய மெட்டா நிறுவனம்!

சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை!

ரஷ்யாவில் ஒரு இந்தியர் உட்பட 17 பேர் கொலை – செல்ஃபி வீடியோ வெளியிட்ட தெலங்கானா இளைஞர்!

கோவை : மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு!

உக்ரைன் போர் தொடர்பாகப் புதினுடன் வீணான சந்திப்பை விரும்பவில்லை – அதிபர் டொனால்ட் டிரம்ப்

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி பேட்டிங் தரவரிசை : ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடம்!

சீனா : சண்டை போடும் மனித ரோபோ!

டாடா பட இயக்குனருடன் இணையும் துருவ் விக்ரம்?

தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 4-வது ரெயில்பாதை திட்டம் : மத்திய அரசு ஒப்புதல்!

பட்டாசு வெடிக்க செய்து, சிலம்பம் சுற்றிய இளைஞர்!

78,000 கோடி நிதி எங்கு சென்றது : முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அண்ணாமலை

கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ நடனமாடிய வீடியோ வைரல்!

தாம்பரம் – செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு ஒப்புதல் – நயினார் நாகேந்திரன் நன்றி!

AWS சர்வர் பாதிப்பால் சூடான ஸ்மார்ட் மெத்தைகள்!

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவில் தங்கப்பட்டு சரிகையை யாக குண்டத்தில் இட்டு வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies