புதுக்கோட்டை அருகே போலீசார் தாக்கியதில் இளைஞருக்கு கைமுறிவு - மருத்துவமனையில் அனுமதி!
Sep 7, 2025, 04:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுக்கோட்டை அருகே போலீசார் தாக்கியதில் இளைஞருக்கு கைமுறிவு – மருத்துவமனையில் அனுமதி!

Web Desk by Web Desk
Jul 18, 2025, 07:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் கோயில் கும்பாபிஷேக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தாக்கியதில் இளைஞருக்கு கைமுறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிராம்பட்டினத்தை சேர்ந்த கணேசன் எஸ்.ஆர்.பட்டணத்தில் உள்ள ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக வந்துவிட்டு சொந்த ஊர் செல்ல மீமிசல் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.

அப்போது சென்னை செல்லும் அரசு பேருந்தை நிறுத்தி அதிராம்பட்டினத்தில் நிற்குமா என்று கேட்டதால் பேருந்து ஓட்டுனருக்கும் கணேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விசாரிக்க சென்றபோது போலீஸ் என்று தெரியாமல் கணேசன் வாக்குவாதம் செய்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த போலீசார் சரமாரியாக தாக்கி விசாரணைக்காக கணேசனை போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயற்சித்தனர். அப்போது மீண்டும் கணேசன் வாக்குவாதம் செய்ததால் போலீசார் மீண்டும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் கணேசன் மயக்கமடைந்ததால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

போலீசார் தாக்கியதில் கணேசனுக்கு கைமுறிவு ஏற்பட்ட சம்பவம் அறிந்த உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனிடையே அரசு பேருந்து கண்ணாடியை கணேசன் உடைத்து சேதப்படுத்தியதாக ஓட்டுநரும், நடத்துனரும் கோட்டைப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் கணேசனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கை எலும்பு முறிவு ஏற்பட்டதால் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கணேசன் சிகிச்சை பெற்று வருவதால் அவரை அங்கேயே காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் மூன்று காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: Sri Chandana Mariamman temple festivalPudukkottaiKottayampatnamyouth was injured in police attackAdhirampatnam
ShareTweetSendShare
Previous Post

திமுக அரசின் தவறுகளை சுமக்கும் கூட்டணி கட்சிகள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Next Post

சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக நடவடிக்கை எடுத்த டி.எஸ்.பி. வாகனத்தை பறித்த திமுக அரசு – அண்ணாமலை கண்டனம்!

Related News

வாணியம்பாடி அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிப்பு!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.100 எரிவாயு மானியம் வழங்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

அமெரிக்காவில் இருந்து மும்பை வந்திறங்கிய மலையாள இயக்குநர் கைது!

சந்திர கிரகணம் – நாகர்கோவில் நாகராஜா கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் முருகன் கோயில் கண்காணிப்பாளர் மீது காவலர் தாக்குதல் – இருவரும் மருத்துவமனையில் அனுமதி!

வாஷிங்டனில் அதிபர் டிரம்பிற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கயானா தேர்தலில் வெற்றி – அதிபர் இர்ஃபான் அலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

உத்தரகாசியில் மேகவெடிப்பால் கொட்டி தீர்த்த மழை – கரைபுரண்டு ஓடிய வெள்ளம்!

ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் – இறுதிசுற்றில் இந்தியா!

தெலங்கானா ஆளுநருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு – மாநில நலன் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்!

தொடர் விடுமுறை – குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடந்த வருமான வரி சோதனை – பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக தகவல்!

ஆவணி மாத பவுர்ணமி – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

அடுத்த மாதம் சீன அதிபரை சந்திக்க ட்ரம்ப் திட்டம் – வெள்ளை மாளிகை தகவல்!

சந்திர கிரகணம் – வடபழனி முருகன் கோயில் நடை இரவு 7 மணிக்கு மேல் சாத்தப்படும் என அறிவிப்பு!

சந்திர கிரகணம் – திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் நடை பிற்பகலுக்கு மேல் அடைக்கப்படும் என அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies