புதுக்கோட்டை அருகே போலீசார் தாக்கியதில் இளைஞருக்கு கைமுறிவு - மருத்துவமனையில் அனுமதி!
Jan 14, 2026, 04:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுக்கோட்டை அருகே போலீசார் தாக்கியதில் இளைஞருக்கு கைமுறிவு – மருத்துவமனையில் அனுமதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 18, 2025, 07:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் கோயில் கும்பாபிஷேக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தாக்கியதில் இளைஞருக்கு கைமுறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிராம்பட்டினத்தை சேர்ந்த கணேசன் எஸ்.ஆர்.பட்டணத்தில் உள்ள ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக வந்துவிட்டு சொந்த ஊர் செல்ல மீமிசல் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.

அப்போது சென்னை செல்லும் அரசு பேருந்தை நிறுத்தி அதிராம்பட்டினத்தில் நிற்குமா என்று கேட்டதால் பேருந்து ஓட்டுனருக்கும் கணேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விசாரிக்க சென்றபோது போலீஸ் என்று தெரியாமல் கணேசன் வாக்குவாதம் செய்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த போலீசார் சரமாரியாக தாக்கி விசாரணைக்காக கணேசனை போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயற்சித்தனர். அப்போது மீண்டும் கணேசன் வாக்குவாதம் செய்ததால் போலீசார் மீண்டும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் கணேசன் மயக்கமடைந்ததால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

போலீசார் தாக்கியதில் கணேசனுக்கு கைமுறிவு ஏற்பட்ட சம்பவம் அறிந்த உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனிடையே அரசு பேருந்து கண்ணாடியை கணேசன் உடைத்து சேதப்படுத்தியதாக ஓட்டுநரும், நடத்துனரும் கோட்டைப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் கணேசனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கை எலும்பு முறிவு ஏற்பட்டதால் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கணேசன் சிகிச்சை பெற்று வருவதால் அவரை அங்கேயே காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் மூன்று காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: Sri Chandana Mariamman temple festivalPudukkottaiKottayampatnamyouth was injured in police attackAdhirampatnam
ShareTweetSendShare
Previous Post

திமுக அரசின் தவறுகளை சுமக்கும் கூட்டணி கட்சிகள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Next Post

சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக நடவடிக்கை எடுத்த டி.எஸ்.பி. வாகனத்தை பறித்த திமுக அரசு – அண்ணாமலை கண்டனம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies