புதுக்கோட்டை அருகே போலீசார் தாக்கியதில் இளைஞருக்கு கைமுறிவு - மருத்துவமனையில் அனுமதி!
Apr 29, 2026, 09:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுக்கோட்டை அருகே போலீசார் தாக்கியதில் இளைஞருக்கு கைமுறிவு – மருத்துவமனையில் அனுமதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 18, 2025, 07:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் கோயில் கும்பாபிஷேக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தாக்கியதில் இளைஞருக்கு கைமுறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிராம்பட்டினத்தை சேர்ந்த கணேசன் எஸ்.ஆர்.பட்டணத்தில் உள்ள ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக வந்துவிட்டு சொந்த ஊர் செல்ல மீமிசல் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.

அப்போது சென்னை செல்லும் அரசு பேருந்தை நிறுத்தி அதிராம்பட்டினத்தில் நிற்குமா என்று கேட்டதால் பேருந்து ஓட்டுனருக்கும் கணேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விசாரிக்க சென்றபோது போலீஸ் என்று தெரியாமல் கணேசன் வாக்குவாதம் செய்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த போலீசார் சரமாரியாக தாக்கி விசாரணைக்காக கணேசனை போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயற்சித்தனர். அப்போது மீண்டும் கணேசன் வாக்குவாதம் செய்ததால் போலீசார் மீண்டும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் கணேசன் மயக்கமடைந்ததால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

போலீசார் தாக்கியதில் கணேசனுக்கு கைமுறிவு ஏற்பட்ட சம்பவம் அறிந்த உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனிடையே அரசு பேருந்து கண்ணாடியை கணேசன் உடைத்து சேதப்படுத்தியதாக ஓட்டுநரும், நடத்துனரும் கோட்டைப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் கணேசனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கை எலும்பு முறிவு ஏற்பட்டதால் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கணேசன் சிகிச்சை பெற்று வருவதால் அவரை அங்கேயே காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் மூன்று காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: Sri Chandana Mariamman temple festivalPudukkottaiKottayampatnamyouth was injured in police attackAdhirampatnam
ShareTweetSendShare
Previous Post

திமுக அரசின் தவறுகளை சுமக்கும் கூட்டணி கட்சிகள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Next Post

சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக நடவடிக்கை எடுத்த டி.எஸ்.பி. வாகனத்தை பறித்த திமுக அரசு – அண்ணாமலை கண்டனம்!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies