உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாலையில் கீரியும், பாம்பும் சண்டையிட்டுக் கொண்டதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
அவுரியா மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலையின் நடுவே கீரியும், நாகப் பாம்பும் சண்டையிட்டுக் கொண்டன. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் இந்த சண்டையைக் கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.