15,000 அடி உயரத்தில் சோதனை - இலக்கை தூளாக்கிய அஸ்திரங்கள்! : பாகிஸ்தான், சீனாவை மிரளவிட்ட இந்தியா!
Jul 18, 2025, 10:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

15,000 அடி உயரத்தில் சோதனை – இலக்கை தூளாக்கிய அஸ்திரங்கள்! : பாகிஸ்தான், சீனாவை மிரளவிட்ட இந்தியா!

Web Desk by Web Desk
Jul 18, 2025, 09:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அக்னி-1, பிருத்வி-2, ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பரிசோதித்த இந்தியா, எல்லையில் குடைச்சல் கொடுத்துவரும் பாகிஸ்தான், சீனாவுக்குப் பலமான செய்தியை அனுப்பியுள்ளது. அது என்ன செய்தி விரிவாகப் பார்க்கலாம்….

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, புற்றீசல் போன்று பாகிஸ்தான் அனுப்பிய துருக்கியின் ட்ரோன்களையும், சீனாவின் ஜெட் விமானத்தையும் துல்லியமாகத் தாக்கி அழித்தது இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பான ஆகாஷ்.

லடாக் எல்லையில் ஓயாமல் குடைச்சல் கொடுத்து வரும் சீனா, பாகிஸ்தானை எதிர்கொள்ள, முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாகப் பரிசோதித்தது இந்தியா.

சவாலான தட்ப வெப்ப நிலைகளிலும் தங்கு, தடையின்றி எதிரி இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் லடாக்கில் 15 ஆயிரம் அடி உயரத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது, மிக வேகமாக நகரும் இரு இலக்குகளை, ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு துல்லியமாகத் தாக்கி அழித்ததாக DRDO தெரிவித்துள்ளது.

4,500 மீட்டர் உயரத்தில் கூட நிலைநிறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு 25 முதல் 30 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வரும் போர் விமானங்கள், டிரோன்கள், ஆளில்லா விமானங்கள், ஹெலிகாப்டர்கள், க்ரூஸ் ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

இதேபோன்று ஒடிசா கடற்பகுதியில் உள்ள அப்துல்கலாம் தீவுப்பகுதியில் அணு ஆயுதங்களைச் சுமந்து கொண்டு, குறுகிய தூரம் சென்று இலக்குகளைத் தாக்கும் பிருத்வி-2 மற்றும் அக்னி-1 பாலிஸ்டிக் ஏவுகணைகள் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

350 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இலக்குகளைத் தாக்கும் பிருத்வி-2 ரக ஏவுகணை 500 கிலோ வெடிகுண்டுகள் அல்லது அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. 700 முதல் 900 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட அக்னி-1 ரக ஏவுகணை ஆயிரம் கிலோ வெடிகுண்டுகள், அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக் கூடியது என்று ராணுவம் கூறியுள்ளது.

உள்நாட்டில் தயாரித்து வரும் ஏவுகணைகளும், வான் பாதுகாப்பு அமைப்புகளும், மிகுந்த நம்பகத் தன்மை கொண்டது என்பதால்,  எல்லையில் அத்துமீறும் சீனா, பாகிஸ்தானுக்கு ஏவுகணை சோதனைகள் மூலம் இந்தியா எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

Tags: ஆபரேஷன் சிந்தூர்Test at 15000 feet - missiles that pulverized the target! : India has intimidated Pakistan and Chinaஅக்னி-1பிருத்வி-2ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை
ShareTweetSendShare
Previous Post

சீனா, ரஷ்யா தயவு வேண்டாம் : டைட்டானியம் உற்பத்தியில் சாதனை படைக்கும் இந்தியா!

Related News

சீனா, ரஷ்யா தயவு வேண்டாம் : டைட்டானியம் உற்பத்தியில் சாதனை படைக்கும் இந்தியா!

ஆளுங்கட்சியினரின் அராஜகம் : அஞ்சி நடுங்கும் அதிகாரிகள்!

இந்தியாவை முஸ்லீம் நாடாக்க முயற்சி : சிக்கிய மத மாற்ற கும்பல் – குவிந்த பல நுாறு கோடி!

“Spam content” சர்ச்சையால் அதிரடி : 1 கோடி கணக்குகளுக்கு பூட்டுப்போட்ட மெட்டா!

கோடி கோடியாய் அள்ளிய பிசிசிஐ : ஒரே ஆண்டில் இவ்வளவு வருமானமா?

‘கிஸ் கேம்’ சர்ச்சையில் ஆஸ்ட்ரோனமர் CEO : வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் – கலாய்த்த எலான் மஸ்க்!

Load More

அண்மைச் செய்திகள்

15,000 அடி உயரத்தில் சோதனை – இலக்கை தூளாக்கிய அஸ்திரங்கள்! : பாகிஸ்தான், சீனாவை மிரளவிட்ட இந்தியா!

கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் : மூடப்படும் ரயில்வே கேட்டால் தவியாய் தவிக்கும் மக்கள்!

டான் ரிவேரா மரணத்தில் மர்மம்? : அனபெல் பொம்மையை சுற்றி சுழலும் கேள்விகள்!

எச்சரிக்கும் மருத்துவர்கள் : சதை உண்ணும் பாக்டீரியா!

திணறும் காவல்துறை : சிதைக்கப்பட்ட சிறுமி கிடைக்குமா நீதி?

அண்ணாமலையார் திருக்கோவிலில் சிறப்பு தரிசனக் கட்டண உயர்வுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்!

ஜம்மு-காஷ்மீர் : சாலை விபத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் 5 பேர் காயம்!

2023-24 இல் பிசிசிஐ-இன் வருவாய் ரூ.9,741 கோடி!

மாற்றத்தையும், வளர்ச்சியையும் வங்காளம் விரும்புகிறது : பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies