15,000 அடி உயரத்தில் சோதனை - இலக்கை தூளாக்கிய அஸ்திரங்கள்! : பாகிஸ்தான், சீனாவை மிரளவிட்ட இந்தியா!
Oct 23, 2025, 02:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

15,000 அடி உயரத்தில் சோதனை – இலக்கை தூளாக்கிய அஸ்திரங்கள்! : பாகிஸ்தான், சீனாவை மிரளவிட்ட இந்தியா!

Web Desk by Web Desk
Jul 19, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அக்னி-1, பிருத்வி-2, ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பரிசோதித்த இந்தியா, எல்லையில் குடைச்சல் கொடுத்துவரும் பாகிஸ்தான், சீனாவுக்குப் பலமான செய்தியை அனுப்பியுள்ளது. அது என்ன செய்தி விரிவாகப் பார்க்கலாம்….

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, புற்றீசல் போன்று பாகிஸ்தான் அனுப்பிய துருக்கியின் ட்ரோன்களையும், சீனாவின் ஜெட் விமானத்தையும் துல்லியமாகத் தாக்கி அழித்தது இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பான ஆகாஷ்.

லடாக் எல்லையில் ஓயாமல் குடைச்சல் கொடுத்து வரும் சீனா, பாகிஸ்தானை எதிர்கொள்ள, முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாகப் பரிசோதித்தது இந்தியா.

சவாலான தட்ப வெப்ப நிலைகளிலும் தங்கு, தடையின்றி எதிரி இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் லடாக்கில் 15 ஆயிரம் அடி உயரத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது, மிக வேகமாக நகரும் இரு இலக்குகளை, ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு துல்லியமாகத் தாக்கி அழித்ததாக DRDO தெரிவித்துள்ளது.

4,500 மீட்டர் உயரத்தில் கூட நிலைநிறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு 25 முதல் 30 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வரும் போர் விமானங்கள், டிரோன்கள், ஆளில்லா விமானங்கள், ஹெலிகாப்டர்கள், க்ரூஸ் ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

இதேபோன்று ஒடிசா கடற்பகுதியில் உள்ள அப்துல்கலாம் தீவுப்பகுதியில் அணு ஆயுதங்களைச் சுமந்து கொண்டு, குறுகிய தூரம் சென்று இலக்குகளைத் தாக்கும் பிருத்வி-2 மற்றும் அக்னி-1 பாலிஸ்டிக் ஏவுகணைகள் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

350 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இலக்குகளைத் தாக்கும் பிருத்வி-2 ரக ஏவுகணை 500 கிலோ வெடிகுண்டுகள் அல்லது அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. 700 முதல் 900 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட அக்னி-1 ரக ஏவுகணை ஆயிரம் கிலோ வெடிகுண்டுகள், அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக் கூடியது என்று ராணுவம் கூறியுள்ளது.

உள்நாட்டில் தயாரித்து வரும் ஏவுகணைகளும், வான் பாதுகாப்பு அமைப்புகளும், மிகுந்த நம்பகத் தன்மை கொண்டது என்பதால்,  எல்லையில் அத்துமீறும் சீனா, பாகிஸ்தானுக்கு ஏவுகணை சோதனைகள் மூலம் இந்தியா எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

Tags: ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணைஆபரேஷன் சிந்தூர்Test at 15000 feet - missiles that pulverized the target! : India has intimidated Pakistan and Chinaஅக்னி-1பிருத்வி-2
ShareTweetSendShare
Previous Post

வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமைக்காவலர் கைது!

Next Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சிறுமுகை அருகே இயந்திர படகு போக்குவரத்து தொடக்கம்!

Related News

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 4-வது ரெயில்பாதை திட்டம் : மத்திய அரசு ஒப்புதல்!

பட்டாசு வெடிக்க செய்து, சிலம்பம் சுற்றிய இளைஞர்!

யமுனை நதியில் மிதக்கும் நுரைகளை அகற்றும் பணி தீவிரம்!

ஆந்திரா : சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நபர் தற்கொலை!

டெல்லி : பீகார் தேர்தலுக்கு சதித்திட்டம் தீட்டிய 4 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

கோவை : மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு!

உக்ரைன் போர் தொடர்பாகப் புதினுடன் வீணான சந்திப்பை விரும்பவில்லை – அதிபர் டொனால்ட் டிரம்ப்

ஐசிசி பேட்டிங் தரவரிசை : ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடம்!

சீனா : சண்டை போடும் மனித ரோபோ!

டாடா பட இயக்குனருடன் இணையும் துருவ் விக்ரம்?

78,000 கோடி நிதி எங்கு சென்றது : முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அண்ணாமலை

கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ நடனமாடிய வீடியோ வைரல்!

தாம்பரம் – செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு ஒப்புதல் – நயினார் நாகேந்திரன் நன்றி!

AWS சர்வர் பாதிப்பால் சூடான ஸ்மார்ட் மெத்தைகள்!

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவில் தங்கப்பட்டு சரிகையை யாக குண்டத்தில் இட்டு வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies