வேதனையில் ஏழை மாணவிகள் : மூடப்படும் தெரசா மகளிர் கிளை ஆராய்ச்சி மையம்!
Jul 21, 2025, 10:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேதனையில் ஏழை மாணவிகள் : மூடப்படும் தெரசா மகளிர் கிளை ஆராய்ச்சி மையம்!

Web Desk by Web Desk
Jul 21, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் செயல்படும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கிளை ஆராய்ச்சி மையத்தை மூடும் முடிவைத் தமிழக அரசு கைவிட வேண்டும் எனக் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏழை, எளிய பொருளாதாரத்தின் பின் தங்கிய மாணவிகளுக்குப் பட்டம் வழங்கி வந்த ஆராய்ச்சி மையம் மூடப்படுவது குறித்தும், அதற்கான காரணம் குறித்து தற்போது பார்க்கலாம்.

1984ம் ஆண்டு கொடைக்கானலில் அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆரின் முயற்சியால் தாழ்த்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்கள் முதுகலை மற்றும் ஆராய்ச்சி கல்வியைப் பெற வேண்டும் என்பதற்காகத் தொடங்கப்பட்டது தான் இந்த அன்னை தெரசா பல்கலைக்கழகம்.

அன்னை தெரசாவின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்தின் கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையத்தைக் கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவிகள் அதிகம் பயிலும் இந்த ஆராய்ச்சி மையத்தை மூட முடிவு செய்திருப்பது கல்வியாளர் மத்தியில் கடும்  அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விரிவாக்க மையத்தை மூடுவதன் மூலம் வருடத்திற்கு 2500 ரூபாய் முதல் 3500 ரூபாய் வரையிலான கட்டணத்தில் முதுகலைப் பட்டத்தைப் பெற்று வந்த மாணவிகளின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது. அதிலும் கல்வி உதவித் தொகையின் கீழ் மலைவாழ் பகுதியைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவிகளுக்கு உயர்கல்வியை வழங்கி வந்த இந்த ஆராய்ச்சி மையம் மூடப்படுவதற்கு பல்வேறு தரப்பினர் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். மேலும் அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் போதிய இடம் ஒதுக்காமல் அலைக்கழிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது

ஆராய்ச்சி மையம் மூடப்படுவதைத் தடுத்து நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய பல்கலைக்கழக நிர்வாகமோ, இந்த தகவல் வெளியே கசிந்தது எப்படி ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவது கல்வியாளர்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Poor students in pain: Teresa Women's Branch Research Center to be closedவேதனையில் ஏழை மாணவியர்தெரசா மகளிர் கிளை ஆராய்ச்சி மையம்today news college
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பத்து படுகொலைகள் நிகழ்ந்துள்ளன : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Next Post

பற்றி எரியும் குப்பை கிடங்கு : சுவாசக்கோளாறால் மூச்சு திணறும் மக்கள்!

Related News

13,700 அடி உயரத்தில் விமானப்படை தளம் : சீனாவுக்கு சவால் அளிக்கும் இந்தியா!

ராணுவ வலிமை பட்டியல் : 4ம் இடம் பிடித்த இந்தியா – பின்னடைவை சந்தித்த பாகிஸ்தான்!

IRON DOME கூட தடுக்காது : இந்தியாவின் நவீன ஹைப்பர்சோனிக் ET-LDHCM ஏவுகணை!

கடைமடைக்கு வராத தண்ணீர் : கெலவரப்பள்ளி விவசாயிகள் புகார்!

துார் வார ஒதுக்கிய ரூ.97 கோடி எங்கே? : பாலைவனமாக மாறிய பனைமரத்துப்பட்டி ஏரி!

திருநங்கையாக 20 ஆண்டுகள் : வங்கதேச இளைஞர் சிக்கியது எப்படி?

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவை கலக்கிய கார் திருடன் சிக்கியது எப்படி?

புதுப்பொலிவு பெறும் விக்டோரியா அரங்கம்!

80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அண்டார்டிகாவில் ஓடிய நதி – ஆய்வில் புதிய தகவல்!

பற்றி எரியும் குப்பை கிடங்கு : சுவாசக்கோளாறால் மூச்சு திணறும் மக்கள்!

வேதனையில் ஏழை மாணவிகள் : மூடப்படும் தெரசா மகளிர் கிளை ஆராய்ச்சி மையம்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பத்து படுகொலைகள் நிகழ்ந்துள்ளன : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சி இருக்கும் வரை, தமிழகத்திற்கு விடிவு காலம் இல்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தென்காசியில் வர்த்தக கண்காட்சியை தொடங்கி வைத்த ஸ்ரீதர் வேம்பு!

அதிமுக உட்கட்சி விவகாரம் : விரைவாக விசாரித்து முடிக்கப்படும் – சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி!

வங்கதேசம் : கல்லூரி வளாகத்தில் விழுந்து நொறுங்கிய விமானம் – 19 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies