தெலுங்கு நடிகரான மகேஷ்பாபு இந்தி படமான சயாராவை பாராட்டியுள்ளார்.
அதில், சயாரா குழுவுக்கு வாழ்த்துகள் எனவும், சிறந்த கதைசொல்லல், தனித்துவமான நடிப்பு ஆகியவற்றுடன் திரைப்படம் அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது எனவும் கூறியுள்ளார்.
மேலும், அஹான் பாண்டே மற்றும் அனீத்பட்டா ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களில் வாழ்ந்திருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.