கடைமடைக்கு வராத தண்ணீர் : கெலவரப்பள்ளி விவசாயிகள் புகார்!
Jul 22, 2025, 03:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கடைமடைக்கு வராத தண்ணீர் : கெலவரப்பள்ளி விவசாயிகள் புகார்!

Web Desk by Web Desk
Jul 21, 2025, 09:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காகத் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை வந்து சேர்வதில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பாகவே வாய்க்கால்கள் தூர்வாரப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களின் வழியாக முதல் போகப் பாசனத்திற்கான தண்ணீர் அண்மையில் திறக்கப்பட்டுள்ளது.

சூளகிரி வட்டத்திற்கு உட்பட்ட கானபள்ளி, பூதி நத்தம், பெத்தமுத்தாலி, அட்டூர், மாரசத்திரம் உள்ளிட்ட 22 கிராமங்கள் இதன்மூலம் பயனடையும் என அரசு அறிவித்திருக்கும் நிலையில், உண்மை நிலை அதற்கு நேர்மாறாக அமைந்துள்ளது. கடைமடை கிராமங்களுக்குத் தண்ணீர் வந்து சேர்வது என்பது காணல் நீராகவே மாறிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வரும் கடைமடைப்பகுதிகளைச் சென்றடையாத நிலையில், அந்த தண்ணீரையே நம்பியிருக்கும் ஏராளமான விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. புதர் மண்டியிருக்கும் கால்வாய்கள் உரிய நேரத்தில் தூர்வாரப்படாததே கடைமடைக்குத் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் எழுந்திருப்பதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் கெலவரப்பள்ளியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடைக்கு வந்து சேர்வதில்லை என குற்றம் சாட்டும் விவசாயிகள், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும், பலகட்ட போராட்டம் நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை என்பதை வேதனையோடு பதிவு செய்கின்றனர்.

கடைமடைக்கும் தண்ணீர் செல்லும் வகையில் கால்வாயைத் தூர்வாரி அகலப்படுத்தும் பணிக்கு ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய் எங்கே செல்கிறது என்ற கேள்வியும் விவசாயிகள் மத்தியில் எழத்தொடங்கியுள்ளது.

எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறப்பதற்கு முன்பாகவே கால்வாய்கள் அனைத்தும் முறையாகத் தூர்வாரப்பட்டிருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: ஓசூர்Water not reaching the stalls: Kelavarapalli farmers complainகெலவரப்பள்ளி விவசாயிகள் புகார்கெலவரப்பள்ளி நீர்த்தேக்கம்
ShareTweetSendShare
Previous Post

துார் வார ஒதுக்கிய ரூ.97 கோடி எங்கே? : பாலைவனமாக மாறிய பனைமரத்துப்பட்டி ஏரி!

Next Post

IRON DOME கூட தடுக்காது : இந்தியாவின் நவீன ஹைப்பர்சோனிக் ET-LDHCM ஏவுகணை!

Related News

13,700 அடி உயரத்தில் விமானப்படை தளம் : சீனாவுக்கு சவால் அளிக்கும் இந்தியா!

ராணுவ வலிமை பட்டியல் : 4ம் இடம் பிடித்த இந்தியா – பின்னடைவை சந்தித்த பாகிஸ்தான்!

IRON DOME கூட தடுக்காது : இந்தியாவின் நவீன ஹைப்பர்சோனிக் ET-LDHCM ஏவுகணை!

துார் வார ஒதுக்கிய ரூ.97 கோடி எங்கே? : பாலைவனமாக மாறிய பனைமரத்துப்பட்டி ஏரி!

திருநங்கையாக 20 ஆண்டுகள் : வங்கதேச இளைஞர் சிக்கியது எப்படி?

இந்தியாவை கலக்கிய கார் திருடன் சிக்கியது எப்படி?

Load More

அண்மைச் செய்திகள்

கடைமடைக்கு வராத தண்ணீர் : கெலவரப்பள்ளி விவசாயிகள் புகார்!

புதுப்பொலிவு பெறும் விக்டோரியா அரங்கம்!

80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அண்டார்டிகாவில் ஓடிய நதி – ஆய்வில் புதிய தகவல்!

பற்றி எரியும் குப்பை கிடங்கு : சுவாசக்கோளாறால் மூச்சு திணறும் மக்கள்!

வேதனையில் ஏழை மாணவிகள் : மூடப்படும் தெரசா மகளிர் கிளை ஆராய்ச்சி மையம்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பத்து படுகொலைகள் நிகழ்ந்துள்ளன : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சி இருக்கும் வரை, தமிழகத்திற்கு விடிவு காலம் இல்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தென்காசியில் வர்த்தக கண்காட்சியை தொடங்கி வைத்த ஸ்ரீதர் வேம்பு!

அதிமுக உட்கட்சி விவகாரம் : விரைவாக விசாரித்து முடிக்கப்படும் – சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி!

வங்கதேசம் : கல்லூரி வளாகத்தில் விழுந்து நொறுங்கிய விமானம் – 19 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies