கடைமடைக்கு வராத தண்ணீர் : கெலவரப்பள்ளி விவசாயிகள் புகார்!
Sep 8, 2025, 04:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கடைமடைக்கு வராத தண்ணீர் : கெலவரப்பள்ளி விவசாயிகள் புகார்!

Web Desk by Web Desk
Jul 21, 2025, 09:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காகத் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை வந்து சேர்வதில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பாகவே வாய்க்கால்கள் தூர்வாரப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களின் வழியாக முதல் போகப் பாசனத்திற்கான தண்ணீர் அண்மையில் திறக்கப்பட்டுள்ளது.

சூளகிரி வட்டத்திற்கு உட்பட்ட கானபள்ளி, பூதி நத்தம், பெத்தமுத்தாலி, அட்டூர், மாரசத்திரம் உள்ளிட்ட 22 கிராமங்கள் இதன்மூலம் பயனடையும் என அரசு அறிவித்திருக்கும் நிலையில், உண்மை நிலை அதற்கு நேர்மாறாக அமைந்துள்ளது. கடைமடை கிராமங்களுக்குத் தண்ணீர் வந்து சேர்வது என்பது காணல் நீராகவே மாறிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வரும் கடைமடைப்பகுதிகளைச் சென்றடையாத நிலையில், அந்த தண்ணீரையே நம்பியிருக்கும் ஏராளமான விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. புதர் மண்டியிருக்கும் கால்வாய்கள் உரிய நேரத்தில் தூர்வாரப்படாததே கடைமடைக்குத் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் எழுந்திருப்பதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் கெலவரப்பள்ளியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடைக்கு வந்து சேர்வதில்லை என குற்றம் சாட்டும் விவசாயிகள், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும், பலகட்ட போராட்டம் நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை என்பதை வேதனையோடு பதிவு செய்கின்றனர்.

கடைமடைக்கும் தண்ணீர் செல்லும் வகையில் கால்வாயைத் தூர்வாரி அகலப்படுத்தும் பணிக்கு ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய் எங்கே செல்கிறது என்ற கேள்வியும் விவசாயிகள் மத்தியில் எழத்தொடங்கியுள்ளது.

எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறப்பதற்கு முன்பாகவே கால்வாய்கள் அனைத்தும் முறையாகத் தூர்வாரப்பட்டிருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: ஓசூர்Water not reaching the stalls: Kelavarapalli farmers complainகெலவரப்பள்ளி விவசாயிகள் புகார்கெலவரப்பள்ளி நீர்த்தேக்கம்
ShareTweetSendShare
Previous Post

துார் வார ஒதுக்கிய ரூ.97 கோடி எங்கே? : பாலைவனமாக மாறிய பனைமரத்துப்பட்டி ஏரி!

Next Post

IRON DOME கூட தடுக்காது : இந்தியாவின் நவீன ஹைப்பர்சோனிக் ET-LDHCM ஏவுகணை!

Related News

டிரம்ப் அளித்த விருந்தில் தடுமாறிய ஜாம்பவான்கள் : வெள்ளை மாளிகையில் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

பிரம்மோற்சவ விழா – வேலூரில் திருப்பதி திருக்குடைகள் மற்றும் தங்கப் பாதம் புறப்பாடு ஊர்வலம்!

அதிரடியாக அறிவித்த டொயோட்டா : SUV கார்கள் விலை ரூ.3.49 லட்சம் வரை குறையுமாம் – சிறப்பு தொகுப்பு!

ஓணம் பண்டிகை தொடர் விடுமுறை – பழனி முருகன் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

ராணுவ பயிற்சியை நிறைவு செய்த வீரர்கள் – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி : சிறப்பு தொகுப்பு!

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 32 காவல் நிலைய மரணங்கள் – மனித உரிமை அமைப்பு தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

விஜயவாடாவில் 72 உயர பிரமாண்ட களிமண் விநாயகர் சிலை கரைப்பு!

பண்ருட்டி அருகே பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அவமானப்படுத்திய சம்பவம் – இடப்பிரச்சனையால் நிகழ்ந்த கொடூரம்!

சந்திர கிரகணம் – திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு!

வாணியம்பாடி அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிப்பு!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.100 எரிவாயு மானியம் வழங்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

அமெரிக்காவில் இருந்து மும்பை வந்திறங்கிய மலையாள இயக்குநர் கைது!

சந்திர கிரகணம் – நாகர்கோவில் நாகராஜா கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் முருகன் கோயில் கண்காணிப்பாளர் மீது காவலர் தாக்குதல் – இருவரும் மருத்துவமனையில் அனுமதி!

வாஷிங்டனில் அதிபர் டிரம்பிற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்!

கயானா தேர்தலில் வெற்றி – அதிபர் இர்ஃபான் அலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies