கடைமடைக்கு வராத தண்ணீர் : கெலவரப்பள்ளி விவசாயிகள் புகார்!
Mar 15, 2026, 07:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கடைமடைக்கு வராத தண்ணீர் : கெலவரப்பள்ளி விவசாயிகள் புகார்!

Murugesan M by Murugesan M
Jul 21, 2025, 09:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காகத் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை வந்து சேர்வதில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பாகவே வாய்க்கால்கள் தூர்வாரப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களின் வழியாக முதல் போகப் பாசனத்திற்கான தண்ணீர் அண்மையில் திறக்கப்பட்டுள்ளது.

சூளகிரி வட்டத்திற்கு உட்பட்ட கானபள்ளி, பூதி நத்தம், பெத்தமுத்தாலி, அட்டூர், மாரசத்திரம் உள்ளிட்ட 22 கிராமங்கள் இதன்மூலம் பயனடையும் என அரசு அறிவித்திருக்கும் நிலையில், உண்மை நிலை அதற்கு நேர்மாறாக அமைந்துள்ளது. கடைமடை கிராமங்களுக்குத் தண்ணீர் வந்து சேர்வது என்பது காணல் நீராகவே மாறிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வரும் கடைமடைப்பகுதிகளைச் சென்றடையாத நிலையில், அந்த தண்ணீரையே நம்பியிருக்கும் ஏராளமான விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. புதர் மண்டியிருக்கும் கால்வாய்கள் உரிய நேரத்தில் தூர்வாரப்படாததே கடைமடைக்குத் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் எழுந்திருப்பதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் கெலவரப்பள்ளியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடைக்கு வந்து சேர்வதில்லை என குற்றம் சாட்டும் விவசாயிகள், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும், பலகட்ட போராட்டம் நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை என்பதை வேதனையோடு பதிவு செய்கின்றனர்.

கடைமடைக்கும் தண்ணீர் செல்லும் வகையில் கால்வாயைத் தூர்வாரி அகலப்படுத்தும் பணிக்கு ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய் எங்கே செல்கிறது என்ற கேள்வியும் விவசாயிகள் மத்தியில் எழத்தொடங்கியுள்ளது.

எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறப்பதற்கு முன்பாகவே கால்வாய்கள் அனைத்தும் முறையாகத் தூர்வாரப்பட்டிருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: ஓசூர்Water not reaching the stalls: Kelavarapalli farmers complainகெலவரப்பள்ளி விவசாயிகள் புகார்கெலவரப்பள்ளி நீர்த்தேக்கம்
ShareTweetSendShare
Previous Post

துார் வார ஒதுக்கிய ரூ.97 கோடி எங்கே? : பாலைவனமாக மாறிய பனைமரத்துப்பட்டி ஏரி!

Next Post

IRON DOME கூட தடுக்காது : இந்தியாவின் நவீன ஹைப்பர்சோனிக் ET-LDHCM ஏவுகணை!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies